சுடச்சுட:

இலக்கியம்

  • உலகின் - முதல் காதல் கடிதம்

  • தை மகள் பிறந்த நாள்!

  • ஆன்மிகம்

    சனி, டிசம்பர் 25, 2010

    வெங்காய வெங்காயம்!


    வெங்காயத்தை நறுக்குகையில்

    எம் குலப் பெண்களை அழவிட்டது.
    வெங்காயத்தை வாங்குகையில்
    எம் இனப் புதல்வர்களை அழவிட்டது.
    தமிழா தமிழா!

    அழுது தவிக்கின்ற உன்னை
    சிரித்திடச் செய்திடவே
    வெங்காயத்தைப் பற்றி
    பெரியாரிடம் கேட்கச் சொன்னேன்.

    நீயோ
    வெறுங்கேள்வி கேட்டு என்னை
    வெறுப்புறச் செய்துவிட்டாய்!
    அரைகுறை அறிவாலே என்னை
    அழஅழச் செய்துவிட்டாய்!

    அன்று
    தமிழகத்துக்கு ஒரு ராஜா-ஜி
    இன்று
    தம்அகத்துக்கு ஒரு ராஜா-2ஜி

    வெங்காயம் வெங்காயம்!

    வெளியே பளபளப்பு!
    உரிக்க உரிக்க வெற்றுத் தாள்தான்!
    பெரியாரின் வெங்காயம் அதுதான்!

    அலைக்கற்றை பார்க்கத்தான் பூதம் பூதம்
    அதனுள்ளே பார்த்தாலோ போதும் போதும்!
    வெங்காயம் வெங்காயம்!
     
    Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
    Shared by WpCoderX