சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

திங்கள், ஜூலை 21, 2014

எனைவிட்டு விலகாத என் காதலியே!

முகத்திரை விலக்கி
உன் மேனியின்
துகில் கலைக்கிறேன்.
நீ
துயில் கலைந்து ஒளிர்ந்தாய்.

உன் மெல்லிய மேனியில்
என் கை விரல்கள் கோலம் போட...
என் ரகசியங்களை
எனக்கே தெரிய வைத்தாயோ?

என் பார்வை எப்போதும் உன் மீதடி...
உன் வசீகரிக்கும் ஒளியால்
என் கண்ணொளி காணாமல் போகுதடி
என் கண்மணியே....

என் மனம் எப்போதும்
உன் குரலுக்காக ஏங்கிக் கிடக்குது பார்...
மௌனத்தின் வலியை நீ அறியாயோ?
பார்...
வதைகின்றாய் என்னை..!

மின்சாரத் தழுவல் ...
சூடேற்றும் சேமிப்புக்கலன்...
நினைவலைகள் உன்னாலே
நெஞ்சத்தில் மோதுதடி..

விரல்கள் பரபரத்து
உன் மேனியில் உரசிப் பார்க்க...
விளங்காத உலகத்தை
விளக்குகிறாய்...

எனை விட்டு
என்றும் விலகாத
அடி என் ஸ்மார்ட்ஃபோன் பெண்ணே!
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix