சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

ஞாயிறு, ஜனவரி 13, 2013

தை மகள் பிறந்த நாள்!



தை மகள் பிறந்த நாள்! 


வெய்யோன் கால்மாறிப் பயணிக்கும் நன்னாள்!

மறந்துபோன நன்றிக்கடனைச் செலுத்துகிறோம்!

வரும் ஆண்டிலேனும் மழையும் வளமையும் பொங்கட்டும்! 


கதிரவனே!

வயிற்றுப்பாட்டைத் தீர்க்கும் தாயாம் விவசாயக் குடி

வயிறு நிறைய நீர்ப் பெருக்கை அளிப்பாய்!


வரும் வருடங்களில்...

வயக்காட்டுச் சகதியில்தான் 

உழவோன் பாதம் மிதித்து விளையாட வேண்டும்!

உன் கிரணங்களால் சுட்டெரிக்கும் தார்ச் சாலைகளில் 

இனியும் அவன் கால் நோகப் போராடக் கூடாது!


ஆதவனே!

பாதகம் செய்யாதே! பாவமும் செய்யாதே!

என் பாட்டாளியின்

பாவம் பார்த்துப் படியிறங்கு! 

படைத்தோம்...

மனம் 

பொங்கிப் படைத்தோம்!


ஒழுக்கத்தை இழந்ததாலே

புழுக்கத்தால் தவித்தோம்! 

அறிவூட்டும் ஆதவனே...

ஒழுக்க நெறி சிறக்கட்டும்!


பண்பூட்டும் பகலவனே...

பயிர் வளம் பெருகட்டும்!

பொங்கும் மங்களம்

எங்கும் தங்கட்டும்!


அன்பன்

செங்கோட்டை ஸ்ரீராம்

 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix