- அக்னிக் குஞ்சுகளே அணி திரள்வீர்.....!!
- தினமணி ஆசிரியருக்கு எழுதிய கடிதம்..!
- பாசம் எனும் கட்டு; முன்னேற்றத்தைத் தடுக்கிறதோ?
- புனித தாமஸ் எனும் புனை கதை!
- இதழியல் அறம் குறித்த நீதிபதியின் பார்வை
- வரதராசப் பெருமாளின் பழையசீவரம் திருமுக்கூடல் பார்வேட்டை உற்ஸவம்
- ஔஷதகிரி ஶ்ரீநித்யகல்யாண ப்ரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயம்
- ஏழ்வரைக்கடியான் என்ற ராமரத்னம்
- தமிழன்னை இழந்துவிட்ட தவமகன்: கௌதம நீலாம்பரன்
- சரணாகதியின் பொருள் உரைத்தவன்!
- வாதம் - விதண்டாவாதம்; தர்க்கம் - குதர்க்கம்!
- வடக்கும் தெற்கும்: தேய்ந்தது எதுவோ?
ஞாயிறு, ஜனவரி 09, 2011
அனுபவ வரம் அளிப்பாய் இறைவா!
நான்...
கூட்டுப்புழுவாய் உயிர்கொண்ட நாள் முதல்
பட்டாம்பூச்சியாய் சிறகுவிரிக்கும் நாள் வரையில்...
சின்னச் சின்னச் சறுக்கல்கள்
எண்ணிக்கை அறியா ஏமாற்றங்கள்!
எல்லாம் அனுபவங்களாய்
உள்ளத்தின் ஆழ்மடிப்பில்
உறங்கிக் கிடக்கின்றன!
எத்தனை எத்தனை பட்டாம்பூச்சிகள்
எனக்கு முன்பும் பின்பும்!
நான் மட்டும்
நிரந்தரப் பதிவாய் நிற்கவா போகின்றேன்!?
நானும் ஒருநாள்...
கால வெளியில் கரைந்து போகக்கூடும்!
ஆனால்... ஆனால்...
பட்டெனும் பகட்டுக்காய்
கூட்டுப்புழு கருக்கப்படுகிறதே!
எண்ண விதை முளைக்கும்போதே
என்னவோ அது களையப்படுகிறதே!
சிறகடித்துப் பறக்கும் நேரம்
சிறகொடிந்து கிடந்தால் பாரம்!
இறைவா...
பட்டாம்பூச்சியாய் பறக்கும் அனுபவத்தை
இறைஞ்சிக் கேட்கின்றேன்...
தந்தருள்வாயே!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
கருத்துரையிடுக