சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

திங்கள், ஆகஸ்ட் 15, 2011

காதிலே பூ! கொள்கையெலாம் ப்பூ ப்பூ...

உண்ணாவிரதம் என்றால் என்னவென்றே தெரியாத

அன்னியன் ஆங்கிலேயனிடம்
உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டாய்!
உத்தம உருவாய் உனைக் கொண்டாடியது உலகம்!

உன் வழியைத்தான் இன்றும் ஒருவர் மேற்கொண்டிருக்கிறார்...

உண்ணாவிரதம் என்றால் என்னவென்றே தெரியாத
அன்னிய அடிவருடிகளிடம்...
போராட்டம் நடத்துபவரையே களங்கம் சுமத்தி
அப்புறப்படுத்தும் வழி கண்டவர்களாய்..!

அன்று அகிம்சைப் போராட்டத்தாலே
காங்கிரஸ் இயக்கம் கொண்டு
ஆங்கிலேயன் காதிலே பூச்சுற்றினாய்!
இன்று ஹிம்சை செய்வதையே வழியாய்க் கொண்ட
காங்கிரஸ் கட்சிக்காரர்கள்
உன் பெயரையே போட்டுக்கொண்டு
உன் காதிலே பூச்சுற்றுகிறார்கள்...

அட... இருங்க... இருங்க...
எங்கள் பங்குக்கு நாங்களும் சுற்றுகிறோம்...
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix