காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ்
வாராதிருந்தால் இனி நான் உன்
வடிவேல் விழிக்கு மை எழுதேன்
மதிவாள் நுதற்குத் திலகம் இடேன்
மணியால் இழைத்த பணிபுனையேன்
பேராதரத்தினொடு பழக்கம்
பேசேன் சிறிதும் முகம் பாரேன்
பிறங்கு முலைப்பால் இனிதூட்டேன்
பிரியமுடன் ஒக்கலை வைத்துத்
தேரார் வீதி வளங்காட்டேன்
செய்ய கனிவாய் முத்தமிடேன்
திகழும் மணித் தொட்டிலில்
திருக்கண் வளரச் சீராட்டேன்
தாரார் இமவான் தடமார்பில்
தவழும் குழந்தாய் வருகவே
சாலிப் பதிவாழ் காந்திமதித்
தாயே வருக வருகவே
- அக்னிக் குஞ்சுகளே அணி திரள்வீர்.....!!
- தினமணி ஆசிரியருக்கு எழுதிய கடிதம்..!
- பாசம் எனும் கட்டு; முன்னேற்றத்தைத் தடுக்கிறதோ?
- புனித தாமஸ் எனும் புனை கதை!
- இதழியல் அறம் குறித்த நீதிபதியின் பார்வை
- வரதராசப் பெருமாளின் பழையசீவரம் திருமுக்கூடல் பார்வேட்டை உற்ஸவம்
- ஔஷதகிரி ஶ்ரீநித்யகல்யாண ப்ரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயம்
- ஏழ்வரைக்கடியான் என்ற ராமரத்னம்
- தமிழன்னை இழந்துவிட்ட தவமகன்: கௌதம நீலாம்பரன்
- சரணாகதியின் பொருள் உரைத்தவன்!
- வாதம் - விதண்டாவாதம்; தர்க்கம் - குதர்க்கம்!
- வடக்கும் தெற்கும்: தேய்ந்தது எதுவோ?
கருத்துரையிடுக