சுடச்சுட:

இலக்கியம்

  • உலகின் - முதல் காதல் கடிதம்

  • தை மகள் பிறந்த நாள்!

  • ஆன்மிகம்

    புதன், ஆகஸ்ட் 15, 2007

    காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ்

    வாராதிருந்தால் இனி நான் உன்
    வடிவேல் விழிக்கு மை எழுதேன்
    மதிவாள் நுதற்குத் திலகம் இடேன்
    மணியால் இழைத்த பணிபுனையேன்

    பேராதரத்தினொடு பழக்கம்
    பேசேன் சிறிதும் முகம் பாரேன்
    பிறங்கு முலைப்பால் இனிதூட்டேன்
    பிரியமுடன் ஒக்கலை வைத்துத்

    தேரார் வீதி வளங்காட்டேன்
    செய்ய கனிவாய் முத்தமிடேன்
    திகழும் மணித் தொட்டிலில்
    திருக்கண் வளரச் சீராட்டேன்

    தாரார் இமவான் தடமார்பில்
    தவழும் குழந்தாய் வருகவே
    சாலிப் பதிவாழ் காந்திமதித்
    தாயே வருக வருகவே
     
    Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
    Shared by WpCoderX