சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

புதன், நவம்பர் 09, 2011

அன்றா சொன்னேன்? நன்றா செய்தேன்!?



பெட்ரோல் விலை குறித்து...
இதை அங்க போய் கேளுங்க!
இல்லை.. நீங்க... பெட்ரோல் விலை உயர்வை வாபஸ் வாங்கலைன்னா நாங்க அமைச்சரவையிலிருந்து வாபஸ் ஆகிடுவோம்னு சொன்னீங்களே!
ஆமாம்! இது மக்கள் விரோத நடவடிக்கை! அவங்க விலை வாபஸ் பத்தி யோசிச்சாகணும். இல்லைன்னா எங்க நிலை வாபஸ்தான்!
ஆனா பிரணாப் என்னமோ வித்தியாசமா பேசுறாரே...
இல்லை இல்லை... இது எங்க உறுதியான இறுதியான முடிவு. நாங்க எதில் இருந்தும் பின்வாக்கப் போவதில்லை...
உங்க எம்பிக்கள் கிட்டே பிரதமர் உறுதியா சொல்லியிருக்காறாமே!
என்ன...?! உறுதியாவா??? அவரு அப்படில்லாம் பேசமாட்டாரே! கொஞ்சம் இருங்க பிரதமர் என்ன டீலிங்ல அப்படி பேசினார்னு தெரிஞ்சுக்கறேன்...
......
......
ம்ம்ம்... எம்பிக்கள்ட்ட பேசிட்டேன். பெட்ரோல் விலையை ஏத்துறதை எங்களால அனுமதிக்க முடியாது. இருந்தாலும், இந்த முறை பிரதமரை நாங்க மன்னிக்கறோம். அடுத்த முறை ஏத்தினா... நிச்சயமா வாபஸ்தான்! அதுல நாங்க உறுதியா இருக்கோம்..!

(பெங்காலி மொழி புரியாததால, இவங்க என்ன பேசியிருப்பாங்கன்னு யோசிச்சதுல.... இப்பிடி!)
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix