செங்கோட்டை ஸ்ரீராம்

எனக்குள்ளே கருக்கொண்ட எண்ண விருட்சத்தின் விதைச் சிதறல்கள்...

My Photo
Name: senkottai sri.sriram
Location: Chennai, TamilNadu, India

காவிரித்தாய் மடியில் பிறந்து (திருச்சி), பரணித்தாய் மடியில்(நெல்லை) வளர்ந்தேன். பள்ளி வாழ்க்கை - பெரும்பாலும் தென்காசியில். கல்லூரி - திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி (பி.எஸ்ஸி கணிதம் 1992-95), மதுரை காமராஜர் பல்கலை. (எம்.பி.ஏ 1997-99) முதல் பணி - மெடிக்கல் ரெப். ஆயுர்வேதத் துறை, அலோபதி. பின் 99 முதல் சென்னையில் பத்திரிகைப் பணி. சுமார் ஐந்து வருடங்கள் - மஞ்சரி டைஜஸ்ட் இதழாசிரியராக... இரண்டரை வருடங்கள்- விகடன் பிரசுரம் பொறுப்பாசிரியராக... தற்போது, சக்தி விகடன் பொறுப்பாளராக இதழ் தயாரிப்புப் பணியில்...

Sunday, August 26, 2007

நந்தம்பாக்கம் ராமர் கோயில் படங்கள்












இங்கே நீங்கள் காண்பது, சென்னையில் பரப்பான பகுதியாக இப்போது திகழும் நந்தம் பாக்கம் பகுதி ராமர் கோயில். இந்தக் கோதண்ட ராமன் தன் மடியில் சீதாதேவியைத் தாங்கிக் காட்சி தருகிறார். இந்தக் கோயிலுக்கு என்று பழமையான வரலாறு இருக்கிறது.


ஒரு காலத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமான் இக்காட்டில் தங்கல் எனும்படிக்கு இந்தப் பகுதிக்கு வந்து காட்சி தருவாராம். வருடத்தில் ஒரு நாள் நிகழ்வாக இது நடைபெற்றுள்ளது. இப்போது இல்லையாம். அதனால்தான் ஈக்காட்டுத்தாங்கல் எனும் பெயரில் இந்தப் பகுதி மருவி வழங்கியுள்ளது.




அந்தக் காலத்தில் பிருங்கி முனிவர் தவம் செய்த பூமி. அதனால் இந்தப் பகுதிக்கு பிருங்கி மலை என்று பெயர். ஆனால் ஆங்கிலேயர் செய்த சதியால் பிருங்கி முனிவர் பெயரை மறைத்து, செயிண்ட் தாமஸ் சர்ச் என்று பழைய காபாலீஸ்வரர் கோயிலை இடித்து சாந்தோம் பகுதியில் கட்டிவிட்டு, பரங்கிமலையாக்கி, செயிண்ட் தாமஸ் மவுண்ட் என்று ஆக்கி, ஒரு சர்ச் -ஐயும் கட்டி, இந்துக்களுக்கு துரோகம் இழைத்து வரும் இடமும் இதுதான்.




இங்குள்ள கோயில் 2000-இல் சாதாரண புல் வளர்ந்த புதர் மண்டிய இடமாகத்தான் இருந்தது. இப்போது ஊர்க்காரர்களும் நல்லுள்ளம் படைத்தவர்களாலும் கோயில் புதுப்பொலிவோடு காட்சி தருகிறது. இந்தக் கோயில் காட்சியை இங்குக் காணலாம்...






0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

Links to this post:

Create a Link

<< Home