சுடச்சுட:

இலக்கியம்

  • உலகின் - முதல் காதல் கடிதம்

  • தை மகள் பிறந்த நாள்!

  • ஆன்மிகம்

    சனி, டிசம்பர் 13, 2014

    தினமணியில் இருந்து வெளியேறினேன்..!



    அன்பு நண்பருக்கு... 

    நான் தினமணி இணையதள ஆசிரியர் பொறுப்பில் இருந்து வெளியேறிவிட்டேன்.

    வெளியேறியதன் பின்னணி...  இதுதான் !

    *****
    தினமணி மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. ஜீரோ நியூஸ் வேல்யூ ஐட்டம் எல்லாம் (எடிட்டர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், படங்கள் என) வருவதாக எல்லாருமே பேசுகிறார்கள். 

    வெப்பில் கமெண்ட்களை மாடரேட் செய்யும் பொறுப்பில் நான் மிகவும் சிரமப்படுகிறேன். அசிங்கமான வார்த்தைகள் கொண்டு திட்டுகிறார்கள்... ஒவ்வொரு முறையும் அவரிடம் சொல்லியிருக்கிறேன்.. தினமணியை அடுத்த நமது எம்.ஜி.ஆர். என்று சொல்ல வைத்துவிட்டதாக எல்லோரும் சொல்கிறார்கள். 

    உடன் இருந்து பார்த்து பல முறை நல்லது சொல்லியிருக்கிறேன்.. ஆனால், அவர் கேட்கவில்லை. ஆனால், என் மீது வன்மத்தை வளர்த்துக் கொண்டார்.  பல முறை உரசல்கள் ... தவறுகளைச் சுட்டிக் காட்டினால் தகராறு. 

    இந்த முறை இண்க்ரிமெண்ட் விவகாரத்தில் மிகவும் மோசமாக நடந்து கொண்டார். 
    பிப்ரவரி மாசமே அவரிடம் எங்கள் டாட்காம் டீம் பேப்பர்களை கொடுத்தேன். ஆனால், போன மாசம் வரை அதை கையெழுத்திட்டு அனுப்பவேயில்லை. 

    தீபாவளி நேரத்தில் அனுப்பியிருந்தாலாவது, போனஸ் போல் ஏதோ கொஞ்சம் பணம் சகாக்களுக்கு கிடைத்திருக்கும். என் டீம் மக்கள் மட்டுமல்லாது, தினமணியின் ஒவ்வொரு எடிஷன் நிருபர்கள், உதவி ஆசிரியர்கள் என அனைவருக்குமே பல சிரமங்கள். ஒழுங்காக ஏப்ரலில் அனுப்பினால், மே மாதம் டிரான்ஸ்பர் ஆகிப் போறவங்க, போகிற இடத்தில் வீடு பார்த்து செட்டில் ஆக முடியும். குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது  உள்பட. 

    ஆனால், இவரோ அக்டோபரிலும் நவம்பரிலும் போட்டால் எப்படி அவர்களால் போய் வேலை செய்ய முடியும். ? 

    எடுத்துச்சொன்னாலும், கேட்க மாட்டார். சுய வேலைக்காக சி.எம்.டியைப் பார்த்து கேட்பவர்.. பணியாளர் குறித்து எதையும் முன்வைக்கவில்லை....

    இத்தகைய சூழலில்தான் இந்தமுறை பெரும் ஏமாற்றத்துக்கு உட்பட்டு, தீபாவளி அன்று பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டேன்...

    **** 

    பிரச்னை ஏற்படக் காரணமாக இருந்த பேஸ்புக் ஸ்டேடஸ் இதுதான்...
    ஆனால், இதனால் பிரச்னை பெரிதாகி, மேலிடத்தில் இருந்து அழைப்பார்கள் என எதிர்பார்த்தேன்.

    அதன்படியே சி.எம்.டி. அழைத்துப் பேசினார். அவரிடம், நீங்கள் என்னை அழைத்துப் பேசுவீர்கள் எனத் தெரியும் என்றேன். என் கருத்துகளை ஏற்றுக் கொண்டார். பின்னர் ஒவ்வொரு எடிஷன் செய்தி ஆசிரியர்களையும் அழைத்து, அவரவர் எடிஷனில் உள்ள காலியிடங்களை நிரப்ப அவரவர்க்கு அதிகாரம் அளித்தார்.

    எல்லாமே எடிட்டர் மூலம்தான் நடக்கும் என்ற நிலையை மாற்றினார். எல்லோருக்கும் இண்க்ரிமெண்ட் உடனடியாகப் போடவும், அரியர்ஸுடன் இந்த மாத சம்பளத்திலேயே சேர்க்கப்படவும் ஏற்பாடு செய்தார். அனைவருக்கும் சரியான தீர்வு கிடைத்தது... ஓரளவு தினமணி என் அதிரடி நடவடிக்கையால் ஒரு சரிவிலிருந்து தப்பித்தது. 

    ஆனால், எடிட்டர் வைத்தியநாதனோ.. ஒன்று நான் இங்கே இருக்க வேண்டும், இல்லை சீராம் இருக்கட்டும்.. என்று சி.எம்.டி.யிடம் பேரம் பேசி, அவரைப் பணிய வைத்துள்ளார். இந்த நிலையில் நானே ராஜினாமா செய்வதாகச் சொல்லி கடிதம் கொடுத்தேன்... 
    எதிர்காலம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. 

    என் பேஸ்புக் ஸ்டேடஸ்!
    Senkottai Sriraam feeling angry
    October 19 at 4:53pm ·
    இந்த முறை 
    தீபாவளி .. கொண்டாட்டத்தில் சுரத்தில்லை! 
    எனக்கு மட்டுமில்லை... 
    சகாக்களுக்கும்தான்!

    உள்ளத்தில் சோர்வடைந்து 
    வெளியில் பல்லிளித்து நடித்து...

    விட்டமின் 'ப' 
    கிட்டாமல் செய்து விட்டதற்காக...
    அந்த ஒருவருக்கு
    நொந்த ஒருவனாய் 
    ஒரு கோடி புண்ணியம்!

    என் 
    சகாக்களின் மனச்சோர்வில் பங்கெடுத்து...
    அலுவலக வேலையைப் பார்த்தபடி
    தீபாவளியைக் கொண்டாடுகிறேன்..!

    உழைப்பை உறிஞ்சி உலா வருபவருக்கு
    எல்லா நாளும் திருநாளே!

    உழைத்துக் களைப்பவருக்கு 
    எல்லா நாளும் ஒரேநாளே!
     
    Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
    Shared by WpCoderX