சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

புதன், ஏப்ரல் 27, 2011

இதயம் கனத்தது; நெஞ்சம் நனைத்தது!



இதழாளன் உனக்கு என் இதயத்தில் இடமுண்டு
இதயத்தை வருடியபடி இனிப்பாய்த்தான் நீ இருந்தாய்
இதுவரை ஏதும் நீ எதிர்க்கேள்வி கேட்டதில்லை
அதனால்தான் அவ்விடத்தை அன்பாய் நான் அளித்திருந்தேன்

இதுவெல்லாம் நேற்று...

இன்றோ..?

இதழாளன்தானா நீ... தான்தோன்றித் தனமாக
இதயத்தைத் தூக்கியெறிந்து இப்படியும் கேட்கின்றாய்?
இதற்கெல்லாம் பதில் சொல்ல இதயத்தில் இடமில்லை..

அலை அலையாய்க் கேள்விக் கணைகள்
வரிசைகட்டி வந்தாலும் அசராமல் பதில் சொல்வேன்...
அந்தோ...
அலைவரிசைக் கேள்வி கேட்டு அதிரவே செய்கின்றாய்...

இதயம் இழந்து நீ கேட்பதனால்,
என்
இதயம் கனத்ததுவே!
நெஞ்சம் நனைத்ததுவே!
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix