சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

From our Blog

வியாழன், ஜூலை 17, 2014

கொங்குதேர் வாழ்க்கை!

அரிவை கூந்தலின்
அழகும் மணமும்
அறியவும் உளவோ ..?
சூடிய பூவே அறிந்திலேன் ...
வாடிய பூவே இயம்புவாய் ...!



கைதிக் கிளி ஏ...!

ஒருமணியாய்க் கருமணியை
உன் கழுத்தில் கட்டிடவே
அருகினின் றழைக்கின்றேன் - ஒரு கிளியே...
உன்னை என் 

கைகளிலே தங்காமல்
கூண்டுக்குள் சிறைப்பிடிக்கும்
சின்ன வளையாளோ ... யாரோ....?




கட்டை விரல் காதலியே!

சுட்டு விரல் பிடித்த காதலி..
ஆள்காட்டி விரல் காட்டி
ஆளை மாற்றிக் கொண்டாள்..
கட்டை விரல் காதலியே
காலம் போக்க உதவுகிறாள்..
***
கண்ணொடு கண் நோக்கின்
வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல...
- குறள் கருத்து

கண்கள் நாலும் பேசும் நேரம்
நானும் நீயும் ஊமையானோம்..
- அடி வான்மதி என் பார்வதி
(சிவா படப் பாடலில்)

வாழ்வின் துணையாக
இளையராஜாவும்
என் கட்டை விரல் காதலி
ஸ்மார்ட் போனும்...!!!

குற்றாலத்தில் சோப்பு, ஷாம்பு, எண்ணெய்க் குளியலுக்குத் தடை: தூய்மையாகக் காட்சி தரும் அருவிக் கரை!


குற்றாலத்தில் இப்போது குளிக்க வருபவர்கள், சோப்பு, ஷாம்பு, எண்ணெய், சிகைக்காய் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்பெல்லாம் எண்ணெய்க் குளியல்தான் குற்றாலத்தில் சிறப்பாக இருக்கும். தலையில் எண்ணெய் வைத்துக் கொண்டு அருவியில் நின்றால், சிகைக்கால், ஷாம்பு போடாமலே தலையில் வைத்த எண்ணெய் காணாமல் போய் விடும்.
எண்ணெய் மாலிஷ் செய்து விடுவதற்கென்றே சிலர் அருவிக் கரைக்கு வெளியே அமர்ந்திருப்பார்கள். இப்போது அந்தக் காட்சிகளை எல்லாம் காண முடியாது. ஆனால்... அருவிக் கரை மிகத்தூய்மையாக உள்ளது. தண்ணீர் அதே தெளிவுடன் செல்கிறது. அருவி விழுந்து நீர் ஓடும் ஓடையில், பிளாஸ்டிக் கழிவு அடைப்புகள் இல்லாமல் நீர் சலசலத்து ஓடுகிறது.
ஆனாலும், வியாபாரிகள் அலுத்துக் கொள்கிறார்கள். கூட்டம் இல்லை... நீதிமன்ற உத்தரவு இப்படியா இருக்க வேண்டும்? குற்றாலக் குளியல் என்றாலே எண்ணெய்தானே! மூலிகை எண்ணெய் தேய்த்து குளிக்கத்தானே குற்றாலம் வருகிறார்கள்... - இவ்வாறாக!~
திங்கள் அன்று குளிக்கச் சென்றேன். கூட்டம் ஓரளவு இருந்தது. நெருக்கியடிக்கும் நிலை இல்லை என்றாலும், அருவிக்கு அருகில் ஒரே தள்ளுமுள்ளு. ஆனால், அருவி நீர் நன்றாக விழும் நடுப் பகுதியில் நெருக்குதல் இன்றி, நன்றாகக் குளிக்கும் வகையில் இருந்தது.
முன்பெல்லாம் அருவி நீர் விழுகிறதோ இல்லையோ... ஒவ்வொருவர் உடலிலும் தேய்த்திருக்கும் எண்ணெய்ப் பிசுக்கை நம் உடலில் இழுவி விட்டுச் செல்வார்கள்... இப்போது அப்படி இல்லை என்றாலும், நெருக்கியடித்தலின் போதான வாடை... குறிப்பாக டாஸ்மாக் சரக்கு நெடி.. குமட்டத்தான் செய்கிறது. இத்தனைக்கும் அருவியிருக்கும் இடத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவுக்கு டாஸ்மாக் கடைகளை மாற்றி விட்டார்களாம்.. இருந்தாலும் தண்ணி போடாமல் தண்ணியில் தலை காட்ட ஏன் இந்தக் குடிமகன்களுக்கு ஞானம் வர மறுக்கிறதோ தெரியவில்லை!
தமிழகம் தரம் தாழ்ந்து போவதற்கு, அளவுக்கு அதிகமான சரக்கு விற்பனை ஒரு காரணமாக அமையக் கூடும்!







பொதிகை அடிவார இயற்கைக் காட்சி...













 
 
எங்கள் ஊர் இயற்கைக் காட்சி... 
 
பொதிகை மலை அடிவாரத்தின் வண்ணக் காட்சி.

இன்னும் பிளாட்டுகள் அளந்து போடப் படாத பசுமை நிறைந்த மண். எப்போது என்னவாகும் என்று தெரியாது. வருங்காலத் தலைமுறைக்கு இதே பசுமையை நாம் விட்டுச் செல்வோமா தெரியாது... குறைந்தது.. இப்படி இருந்தது நம் மண் என்ற காட்சியையாவது இணையவெளியில் பதிந்துவிட்டுச் செல்வோம். அது நம்மால் முடியும்~!

ஒவ்வொரு வண்ணக் கலவையிலும், ஒளிக் கலவையிலும் ரசித்து எடுத்தேன்... இந்தப் படங்களை!

நல்ல அழகான பின்னணி. இதழ்களின் அட்டையிலோ, உள் பக்கங்களிலோ பின்னணிப் படங்களாக வைத்து லே-அவுட் செய்து வெளியிட ஏற்ற கவர்ந்திழுக்கும் தன்மை இவற்றில் இருந்ததை உணர்ந்தேன்.


 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix