சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

வெள்ளி, டிசம்பர் 21, 2012

நீ நீயாக இருப்பதால்!


தைரியமாகச் செல் என் சகோதரி! 
உனக்கு என் தோத்திரம்!


மிஷனரிக் கல்வியின் மூளைச் சலவைக்கு மயங்காமல்
இன்றும் நீ நீயாக இருக்கிறாயல்லவா...
உனக்கு என் தோத்திரம்!


எம்என்சி கம்பெனிகள் உன் ஒழுக்க வாழ்வுக்கு எமனாக வந்தபோதும் 
நீ நீயாக இருக்கிறாயல்லவா...
உனக்கு என் தோத்திரம்!


கல்லறைக் காதல் வசனம் சொல்லி மயக்கினாலும் 
சில்லறைப் பசங்களை சீண்டாமல் இருக்கிறாயல்லவா...
உனக்கு என் தோத்திரம்!


ஆனாலும் சகோதரி..,


என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும்!
நீ ஏமாறுவதைக் கண்டு 
கையாலாகாத்தனத்தால் அழுவதற்காக அல்ல!
உன்னை ஏமாற்றுபவனைக்
கல்லெறிந்து விரட்டுவதற்காக!

வெள்ளி, டிசம்பர் 07, 2012

அருணகிரிநாதரின் முகநூல்





நமது நண்பர் திரு. மறவன்புலவு கே.சச்சிதானந்தன் அவர்கள் ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தார். அவர் அனுப்பிய விஷயம் மிகவும் சுவாரசியமாக இருந்ததால், அதனை மீண்டும் எடுத்து இங்கே கையாள்கிறேன். அதென்ன முகநூல்... நாம் ஏதோ புதிது புதிதாக சொல்லிக் கொண்டு வருகிறோமே! நம் முகநூல் எல்லாம் தூசுதான்... இந்த அருணகிரிநாதர் கூறும் முகநூல் தரிசனத்தைக் கண்டபின்!
மறவன்புலவு கே.சச்சிதானந்தம் ஐயாவின் மின்னஞ்சல் விவரம் இது...!

அருணகிரிநாதரின் முகநூல்:

Face book created by Arunagirinathar as retold in English by my good friend Prof. S. A. Sankaranaynan who kept the line of succession of Prof. Hensman of Jaffna at Arts College, Kumbakonam,
Prof. Hensman of Jaffna taught English to the famed Silver toungued Srinivasa Sasthiryar.
Prof. Hensman of Jaffna was the first in the island to organise the freedom movement for Tamils in 1905.
Please refer to GG Ponnambalam's marathon speech at the State Council in 1939.

A face flies the peacock and plays;
ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
Another lisps the WORD with God;
ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
A third undoes all our misdeeds;
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
One spears the hill that blocks the Way;
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
One slays the many-disguised Soora;
மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
One weds Valli in bridal joy;
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
Six-in-one or six are you, grace me with your Face book!
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
O! LORD! Abiding on the sun-stone hill of yore!
மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே.

- மறவன்புலவு கே.சச்சிதானந்தன்
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix