ஞாயிறு, ஜூன் 29, 2014

உனக்கான கவிதை இது...!


உனக்காக நான் எழுதும்
உள்ளக் குமுறல்கள்...
படித்தவரின் பாராட்டைப்
பெற்று விடுகின்றன...
நீயோ...
பாராமுகத்துடன் நழுவுகிறாய்...
பார்! பார்...!
உன்னில் இருந்து வெளிப்படும்
வார்த்தைகளுக்காய்...
உள்ளம் காத்திருப்பில்!
அதுவரைக்கும்
என் வார்த்தைகள்
வளர்ந்து கொண்டேயிருக்கும்!

1 கருத்து: