ஞாயிறு, ஜனவரி 16, 2011

புதுக் குறள் பத்து


வள்ளுவர் நாளில் நவீனக் குறள்பத்து 
நல்லோர்மன் னித்தருள்வீ   ரே !
பொதுமக்களியல் - குடிமையியல் - ஆட்சியியல் - குடிசெயல்வகையியல்
மலையளவு ஊழல் எனினும் மறப்போம் 

அலைக்கற்றை அவ்வளவு தான். (1)
கற்பனையில் தோன்றியதாய்க் கட்டவிழ்த்துக் காட்டிடுவோம்

விற்பனையில் பார்த்ததைத் தான் (2)
விலைவாசி ஏன்கவலை விற்பவற்றின் பங்காய்

நிலையாக நோட்டுவரும் போது? (3)
இலவசம் இல்லை இவன்வசம் இல்லை

பலமிழந்த பார்வையிது காண்  (4)
தைதான் சுயமரியா தைதான் சிதைந்தாலும்

வைவேனே வையத்தைத் தான் (5)
வெங்காயக் கேள்வி வெறுங்கேள்வி கேட்டக்கால்

பொங்காதோ எந்தன் உளம் (6)
செய்தவற்றில் செய்தவற்றை சேர்ந்தேதான் கண்டிட்டால்

செய்யாச் செயலெனவே புகல் (7)
இனத்தை சுகத்தை இனிதாய் விரும்பின்

மனத்தை உறக்கத்தில் வை  (8)
புதிதாகச் செய்வோம் புதிராகச் செய்வோம்

எதிர்க்கேள்வி கேட்டால் வழக்கு (9)
புத்தாண்டு பூத்ததுவாய் புன்சிரிப்பைக் காட்டிடுவோம்

வித்தாச்சே எங்கள்கொள் 'கை' (10)
© தினக்குரலன் மணிக்குறளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக