புதன், ஆகஸ்ட் 15, 2007

காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ்

வாராதிருந்தால் இனி நான் உன்
வடிவேல் விழிக்கு மை எழுதேன்
மதிவாள் நுதற்குத் திலகம் இடேன்
மணியால் இழைத்த பணிபுனையேன்

பேராதரத்தினொடு பழக்கம்
பேசேன் சிறிதும் முகம் பாரேன்
பிறங்கு முலைப்பால் இனிதூட்டேன்
பிரியமுடன் ஒக்கலை வைத்துத்

தேரார் வீதி வளங்காட்டேன்
செய்ய கனிவாய் முத்தமிடேன்
திகழும் மணித் தொட்டிலில்
திருக்கண் வளரச் சீராட்டேன்

தாரார் இமவான் தடமார்பில்
தவழும் குழந்தாய் வருகவே
சாலிப் பதிவாழ் காந்திமதித்
தாயே வருக வருகவே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக