சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

சனி, ஆகஸ்ட் 02, 2014

காதலிக்க நேரமில்லை....


எவனோ முன்னாடியே எழுதி முடிச்சிட்டான்!
எனக்கு வேலை வைக்காமல்!
***
என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னைத் தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் செய்தி அனுப்பு...
என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
காதல் அதை சொல்லுகின்ற வழி தெரிந்தால்
சொல்லி அனுப்பு
பூக்கள் உதிரும் சாலை வழியே
பேசிச் செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போலே
நினைத்து கொள்கிறேன்

கடிதம் ஒன்றில் கப்பல் செய்து
மழையில் விடுகிறேன்..
கனவில் மட்டும் காதல் செய்து
இரவைக் கொல்கிறேன்...

யாரோ உன் காதலில் வாழ்வது யாரோ
உன் கனவினில் நிறைவது யாரோ
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ......

ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ
ஒரு பகல் என சுடுவது ஏனோ
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ...
காதல் தர
 நெஞ்சம் காத்து இருக்கு
காதலிக்க அங்கு நேரம் இல்லையா...
இலையைப் போல் என் இதயம் தவறி விழுதே!
***


 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix