சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

வியாழன், ஆகஸ்ட் 14, 2014

சுதந்திர தினச் சிந்தனை



சுதந்திர தினத்தில்... ஒரு சிந்தனை!
வருடம் தவறாமல் எழும் சிந்தனை!!
சுதந்திர தினக் கொடியேற்றம்...
கொடியின் நிறங்கள்...
பசுமை-செழுமை-இஸ்லாமாம்...
வெண்மை-அமைதி-கிறித்துவமாம்...
காவி-தியாகம்-இந்துவாம்...
குண்டூசிகளால் குத்துப்பட்டும்
சட்டைப் பைகளில் ஒட்டிக் கொண்டு சிரிக்கிது
தேசியக் கொடி!
குத்துப் பட்டதோ காவி நிறம்-தியாக நிறம்.
தேசியக் கொடியும்
அதனால்தானே விழாமல் தாங்கி நிற்கிறது?!
அதுதான் மேலே ஓங்கி உயரப் பறக்கிறது!
தியாகம் மட்டும் இல்லை என்றால்
தேசியம் எங்கே நிலைக்கப் போகிறது!
குத்துப் பட்டும் சிரிக்கும் காவியைப்போலே
வெட்டுப் பட்டும் வேதனைப் பட்டும்
தேசியத்தைத் தாங்கி நிற்பீர்...
இந்திய நாட்டின் இந்துக்களே!
தியாகிகளே!

வியாழன், ஆகஸ்ட் 07, 2014

சிறை மீட்க வாராயோ..?


அன்று...!
தனிமைத் தவம் அன்று...!
ஆரவாரம்! கூச்சல்! அமைதியின்மை!
சத்தங்களினிடையே சந்தம் பழக்கினேன்...
தனிமையைத் தேடி ஏங்கியது மனம்.

தனிமை கிடைத்தபாடில்லை!
தவம் தொடங்கியபாடில்லை!

இறைவனை இருத்தி இயங்க வேண்டும்!
இறைஞ்சிக் கிடந்தே இருக்கத் தொடங்கினேன்!

ஆனாலும்...

தனிமை கிட்டிய பாடில்லை!
தவமும் முட்டிய பாடில்லை!

இன்று..!
செல்லரிக்கும் தனிமைதான்!
அமைதி தவழும் பூக்காடு

மனசு மரத்துவிட்ட மயானத் தோற்றம்!
தனிமை தவிர்க்க தவியாய்த் தவித்தேன்!
ஆரவாரத்தை நோக்கி அலைந்தது மனம்!

நன்றாய்த்தான் முகம் காட்டினாள்!
நாள்கள் சிலநூறு கடந்து விட்டது!
நாணமும் சிலநாளில் நகர்ந்து விட்டது!

அவள்...
நன்றாய்த்தான் முகம் காட்டினாள்!
நாணலாய் நானும் வளைந்து கொடுத்தேன்!

அன்பை போதிக்கும் 'டீச்சர்' என எண்ணி..!

ஆனாலும்...
ஒவ்வொரு நொடியும் 'டார்ச்சர்' தான்!
சிந்தையில் புகுந்து துவம்சம் செய்கிறாள்!

நான் செய்த குற்றம்...
இதயவாசல் கதவு திறந்து
இருத்தி வைத்தேன் உள்ளுக்குள்!

எனக்கான தண்டனை..!
தனிமைச் சிறையில் கைதியானேன்..!

நாட்கள்தான் நகர்கின்றன...

சிறைமீட்க வருவாளோ..
சிந்தையை மீட்டுத் தருவாளோ...?

செவ்வாய், ஆகஸ்ட் 05, 2014

ஆசாரக் கண்ணப்பர்


லிப்கோ என்ற புத்தக நிறுவனம் சென்னையில் உள்ளது. வைணவ, பக்தி வேதாந்த புத்தகங்கள் மட்டுமல்லாது, தமிழ் ஆங்கில அகராதி உள்ளிட்டவற்றையும் வெளியிட்டு பெருமை பெற்றது. வைஷ்ணவ, ஸ்மார்த்த சந்தியாவந்தனம், நித்யானுஷ்டாக்ரமம், நித்யானுசந்தானம், உபாகர்மம், குடும்ப ஜோதிடம் உள்ளிட்ட புத்தகங்கள் மிகவும் பிரபலமானவை. குடும்பத்தில், அல்லது நண்பர்கள் இல்லத்தில் ஏதாவது உபநயன முகூர்த்தம் இருந்தால், அவற்றில் நான் பெரும்பாலும் லிப்கோவில் சந்தியாவந்தனம் புத்தகத்துடனேயே கலந்து கொண்டு, உபநயனச் சிறுவனுக்கு புத்தகத்தை அளித்து ஆசிகூறுவது வழக்கம்.
இவ்வளவு ஆசார அனுஷ்டானாதிகளுடன் இருந்து புத்தகங்களைப் பதிப்பிதாலும், ஒரு வைணவ ஆசார குடும்பத்தைச் சேர்ந்தவராய் இருந்தாலும், இந்த நிறுவனத்தின் நிறுவனர் சர்மாஜி தம் இரு கண்களையும் ஸ்ரீ சங்கர நேத்ராலயாவின் 'கண் தான மையத்திற்கு' தானம் செய்தார் என்பது நாற்பது வருடங்களுக்கு முந்தைய ஆச்சரியமான செய்தி.
அவருடைய வாழ்க்கைக் குறிப்பை ஒரு இடத்தில் படிக்க நேர்ந்தது.
***
ஸ்ரீ வரதாச்சாரி கிருஷ்ணஸ்வாமி சர்மா (லிப்கோ புத்தக வெளியீட்டு நிறுவனத்தின் நிறுவனர்)
ஸ்ரீ வரதாசாரி கிருஷ்ணஸ்வாமி சர்மா 1908 -ஆம் வருடம் டிஸம்பர் மாதம் 7-ம் தேதியன்று பிறந்தார். உலகப் பெருந் தலைவர் ராஜாஜி தோன்றிய 'திருமலை நல்லான் சக்ரவர்த்தி' என்னும் பரம்பரையில் கிருஷ்ணஸ்வாமி சர்மாவும் பிறந்தார். பழைய தென் ஆர்காடு மாவட்டம் மேட்டுப்பாளையம் என்ற கிராமமே அவர் பிறந்த ஊர். கிருஷ்ணஸ்வாமி சர்மா தணிக்கைத் துறையில் ஜி.டி.ஏ.(ACA என்று இன்று அறியப்படும்) தேர்வில் வெற்றி பெற்று, பல கோயில்களின் கணக்குகளைத் தணிக்கையும் செய்திருக்கிறார்.
கிருஷ்ணஸ்வாமி சர்மா புத்தகங்களை வெளியிடும் ஒரு நிறுவனத்தைத் துவக்க விரும்பினார். அவர் சிறுவனாக இருந்தபோது கடலூர் ஸெயிண்ட் ஜோஸப் உயர்நிலைப் பள்ளி மாணவர் என்ற வகையில், அந்தப் பள்ளியின் முதல்வர் வெர்ஜர் பாதிரியாரிடம் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார். அந்த பாதிரியாரிடம் புத்தக வெளியீட்டு நிறுவனம் குறித்து யோசனை கேட்டார். ரோமன் கத்தோலிக்கக் கிறித்துவர்களின் புனித தெய்வமான 'லிட்டில் ப்ளவர்' என்னும் பெயரை பிரசுர நிறுவனத்திற்கு வைக்குமாறு அந்த பாதிரியார் யோசனை கூறினார்.
கிருஷ்ணஸ்வாமி சர்மா அந்த யோசனையை ஏற்றுக் கொண்டார். கிருஷ்ணஸ்வாமி சர்மா 'லிட்டில் ப்ளவர்' (www.lifcobooks.com) என்ற பெயரை ஏற்றதற்கு மற்றொரு காரணமும் உண்டு.
வைணவ நம்மாழ்வாருக்கு வகுளாபரணர் என்ற ஒரு பெயரும் உண்டு. வகுள புஷ்பம் சிறியதாகவும், அழகானதாகவும், வாசனை கொண்டதாகவும் விளங்கும். அந்தச் சிறிய புனிதமான பூவைக் கருத்தில் கொண்டும், 'லிட்டில் ப்ளவர்' என்ற பெயர் அமைந்தது.
இவ்வாறாக 'தி லிட்டில் ப்ளவர் கம்பெனி' 1929-ம் ஆண்டில் பிறந்தது. வடகலை, தென்கலை வைணவப் பிரிவினரை முதலில் ஒற்றுமைப்படுத்தி, பிறகு அத்வைதிகளையும், துவைதிகளையும் ஐக்கியப்படுத்த வேண்டும் என்பது அவர் நோக்கம். அதைச் செயல்படுத்த அவர் வாழ்நாள் முழுவதும் உழைத்தார்.
கிருஷ்ணஸ்வாமி சர்மா ஸ்ரீலக்ஷ்மீஹயக்ரீவரிடம் இடையறாத பக்தி கொண்டவர். சென்னை நங்கநல்லூரில் ஸ்ரீலக்ஷ்மீஹயக்ரீவருக்கு ஆலயம் எழுப்பப்பட்டதில் அவர் பிரதான பங்கு வகித்தார். இவ்வாறு பலப்பல சமயப் பணிகளை அவர் ஆற்றியுள்ளார்.
ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி சர்மாவின் பெரும் பணிகளைப் பாராட்டி மைசூர் ஸ்ரீ பரகால மட ஜீயர் ஸ்வாமிகள் 25-6-1977 அன்று 'ஹயக்ரீவ சேவா ரத்னம்' என்ற பட்டத்தை கிருஷ்ணஸ்வாமி சர்மாவுக்கு அளித்தார். ஸ்ரீ வி.கிருஷ்ணஸ்வாமி சர்மா 1979-ம் வருடம் ஜூலை மாதம் 22-ம் தேதியன்று ஆண்டவன் திருவடி அடைந்தார்.
கண்தானம் என்பது வெகுவாக பிரபலம் ஆகாத 1979-லேயே, ஒரு வைணவ ஆசார குடும்பத்தைச் சேர்ந்தவராய் இருந்தாலும், சர்மாஜி தம் இரு கண்களையும் ஸ்ரீ சங்கர நேத்ராலயாவின் 'கண் தான மையத்திற்கு' தானம் செய்தார்.
'ஸ்ரீசடாரி சேவக', 'ஸ்ரீ ஹயக்ரீவ ஸேவா ரத்நம்', 'பக்தி பிரசாரண பிரவீண' போன்ற பல பட்டங்களைப் பெற்ற ஸ்ரீ வரதாசாரி கிருஷ்ணஸ்வாமி சர்மா புத்தக வெளியீட்டாளர்களிடையே ஒரு வைரமாக என்றென்றும் ஒளிவீசிக் கொண்டிருக்கிறார்.
***
உண்மைதான். ஆசாரம், அனுஷ்டானம் என்று சொல்லி, பழைமைக் கருத்துகளோடு நவீனத்தை உள்ளே புக விடாமல் இருந்தால் நஷ்டம் சமூகத்துக்குத்தான் என்பதை உணர்த்தியவர். நம் நடைமுறைகள் கால மாற்றத்துக்குத் தக்க மாற்றிக்கொள்ளத் தக்கவை -  ஆனால், அடிப்படையை மாற்றாமல்! மறக்காமல்!!டும் ஒரு நிறுவனத்தைத் துவக்க விரும்பினார். அவர் சிறுவனாக இருந்தபோது கடலூர் ஸெயிண்ட் ஜோஸப் உயர்நிலைப் பள்ளி மாணவர் என்ற வகையில், அந்தப் பள்ளியின் முதல்வர் வெர்ஜர் பாதிரியாரிடம் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார். அந்த பாதிரியாரிடம் புத்தக வெளியீட்டு நிறுவனம் குறித்து யோசனை கேட்டார். ரோமன் கத்தோலிக்கக் கிறித்துவர்களின் புனித தெய்வமான 'லிட்டில் ப்ளவர்' என்னும் பெயரை பிரசுர நிறுவனத்திற்கு வைக்குமாறு அந்த பாதிரியார் யோசனை கூறினார்.

சனி, ஆகஸ்ட் 02, 2014

காதலிக்க நேரமில்லை....


எவனோ முன்னாடியே எழுதி முடிச்சிட்டான்!
எனக்கு வேலை வைக்காமல்!
***
என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னைத் தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் செய்தி அனுப்பு...
என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
காதல் அதை சொல்லுகின்ற வழி தெரிந்தால்
சொல்லி அனுப்பு
பூக்கள் உதிரும் சாலை வழியே
பேசிச் செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போலே
நினைத்து கொள்கிறேன்

கடிதம் ஒன்றில் கப்பல் செய்து
மழையில் விடுகிறேன்..
கனவில் மட்டும் காதல் செய்து
இரவைக் கொல்கிறேன்...

யாரோ உன் காதலில் வாழ்வது யாரோ
உன் கனவினில் நிறைவது யாரோ
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ......

ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ
ஒரு பகல் என சுடுவது ஏனோ
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ...
காதல் தர
 நெஞ்சம் காத்து இருக்கு
காதலிக்க அங்கு நேரம் இல்லையா...
இலையைப் போல் என் இதயம் தவறி விழுதே!
***


 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix