சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

வெள்ளி, டிசம்பர் 21, 2012

நீ நீயாக இருப்பதால்!


தைரியமாகச் செல் என் சகோதரி! 
உனக்கு என் தோத்திரம்!


மிஷனரிக் கல்வியின் மூளைச் சலவைக்கு மயங்காமல்
இன்றும் நீ நீயாக இருக்கிறாயல்லவா...
உனக்கு என் தோத்திரம்!


எம்என்சி கம்பெனிகள் உன் ஒழுக்க வாழ்வுக்கு எமனாக வந்தபோதும் 
நீ நீயாக இருக்கிறாயல்லவா...
உனக்கு என் தோத்திரம்!


கல்லறைக் காதல் வசனம் சொல்லி மயக்கினாலும் 
சில்லறைப் பசங்களை சீண்டாமல் இருக்கிறாயல்லவா...
உனக்கு என் தோத்திரம்!


ஆனாலும் சகோதரி..,


என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும்!
நீ ஏமாறுவதைக் கண்டு 
கையாலாகாத்தனத்தால் அழுவதற்காக அல்ல!
உன்னை ஏமாற்றுபவனைக்
கல்லெறிந்து விரட்டுவதற்காக!
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix