சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

சனி, ஆகஸ்ட் 23, 2008

செங்கோட்டை பெருமாள் திருவிழா காட்சிகள்









செங்கோட்டை சுந்தரராஜப் பெருமாள் - உத்ஸவத்தின் போது எடுக்கப்பட்டவை. தேர்த்திருவிழா படங்கள் மற்றும் கருட வாகன உலா படம்.


செங்கோட்டையில் புகழ்பெற்ற சுந்தரராஜப் பெருமானுக்கு, அடியேன் செங்கோட்டை ஊரில் இருந்த நாட்களில் (பத்து வருடங்களுக்கு முன்) பாசுரங்களை ஸேவித்து, சாத்துமுறை பாசுரங்களை ஸேவிப்பதுண்டு. இரண்டு வருடங்களுக்கு மேல் இந்தக் கைங்கர்யம் நடந்து வந்தது. தெருவில் உள்ள சிறார்களுக்கு அப்போது பிரபந்த பாசுரங்களைச் சொல்லிக் கொடுத்தேன். நன்றாகச் சொல்லத் தொடங்கியிருந்தனர். பின்னர் அவ்வப்போது ஊருக்குச் செல்லும்போதெல்லாம் அந்த சிறார்கள் பாசுரம் சொல்லும் அழகைக் கேட்டுவந்தேன். பின்னர் அவர்களும் படித்து, மேல்படிப்பு அது இதுவென்று வெளியூர்களுக்குச் சென்றுவிட்டனர். ஆயினும் இப்போதும் ஒருவரை பெருமாள் தன்னுடனே வைத்துக் கொண்டிருக்கிறார் - பாசுர மொழிகளைக் கேட்டு இன்புறுவதற்காக!
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix