செங்கோட்டை ஸ்ரீராம்

எனக்குள்ளே கருக்கொண்ட எண்ண விருட்சத்தின் விதைச் சிதறல்கள்...

My Photo
Name: senkottai sri.sriram
Location: Chennai, TamilNadu, India

காவிரித்தாய் மடியில் பிறந்து (திருச்சி), பரணித்தாய் மடியில்(நெல்லை) வளர்ந்தேன். பள்ளி வாழ்க்கை - பெரும்பாலும் தென்காசியில். கல்லூரி - திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி (பி.எஸ்ஸி கணிதம் 1992-95), மதுரை காமராஜர் பல்கலை. (எம்.பி.ஏ 1997-99) முதல் பணி - மெடிக்கல் ரெப். ஆயுர்வேதத் துறை, அலோபதி. பின் 99 முதல் சென்னையில் பத்திரிகைப் பணி. சுமார் ஐந்து வருடங்கள் - மஞ்சரி டைஜஸ்ட் இதழாசிரியராக... இரண்டரை வருடங்கள்- விகடன் பிரசுரம் பொறுப்பாசிரியராக... தற்போது, சக்தி விகடன் பொறுப்பாளராக இதழ் தயாரிப்புப் பணியில்...

Wednesday, August 15, 2007

காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ்

வாராதிருந்தால் இனி நான் உன்
வடிவேல் விழிக்கு மை எழுதேன்
மதிவாள் நுதற்குத் திலகம் இடேன்
மணியால் இழைத்த பணிபுனையேன்

பேராதரத்தினொடு பழக்கம்
பேசேன் சிறிதும் முகம் பாரேன்
பிறங்கு முலைப்பால் இனிதூட்டேன்
பிரியமுடன் ஒக்கலை வைத்துத்

தேரார் வீதி வளங்காட்டேன்
செய்ய கனிவாய் முத்தமிடேன்
திகழும் மணித் தொட்டிலில்
திருக்கண் வளரச் சீராட்டேன்

தாரார் இமவான் தடமார்பில்
தவழும் குழந்தாய் வருகவே
சாலிப் பதிவாழ் காந்திமதித்
தாயே வருக வருகவே

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

Links to this post:

Create a Link

<< Home