செங்கோட்டை ஸ்ரீராம்

எனக்குள்ளே கருக்கொண்ட எண்ண விருட்சத்தின் விதைச் சிதறல்கள்...

My Photo
Name: senkottai sri.sriram
Location: Chennai, TamilNadu, India

காவிரித்தாய் மடியில் பிறந்து (திருச்சி), பரணித்தாய் மடியில்(நெல்லை) வளர்ந்தேன். பள்ளி வாழ்க்கை - பெரும்பாலும் தென்காசியில். கல்லூரி - திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி (பி.எஸ்ஸி கணிதம் 1992-95), மதுரை காமராஜர் பல்கலை. (எம்.பி.ஏ 1997-99) முதல் பணி - மெடிக்கல் ரெப். ஆயுர்வேதத் துறை, அலோபதி. பின் 99 முதல் சென்னையில் பத்திரிகைப் பணி. சுமார் ஐந்து வருடங்கள் - மஞ்சரி டைஜஸ்ட் இதழாசிரியராக... இரண்டரை வருடங்கள்- விகடன் பிரசுரம் பொறுப்பாசிரியராக... தற்போது, சக்தி விகடன் பொறுப்பாளராக இதழ் தயாரிப்புப் பணியில்...

Wednesday, August 01, 2007

ஸ்ரீ சுதர்ஸனர்சக்கரத்தாழ்வார் மகிமை

ஓம் ஸ்ரீ சுதர்ஸனாய நம:

ஓம் சுதர்ஸனாய வித்மஹே மஹாஜ்வாலாய தீமஹிதந்நோ சகர ப்ரஜோதயாத்

அறிவியல் அற்புதங்களும் கண்டுபிடிப்புகளும் நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ள காலத்தில் நாம் இருக்கிறோம். எண்ணிய எய்தும் அற்புதம் வாய்க்கப்பெற்ற இந்நாளில், இத்தகைய பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கும் ஒரு முதல் கண்டுபிடிப்பாக ஒன்று நம் நினைவில் வரும்... அது என்ன?

மனிதன் தன் சக்தியை உணரத்தொடங்கிய முதல் கால கட்டம். அதை கற்காலம் என்று வகுத்திருக்கிறார்கள் இன்றைய அறிவியலார். அந்தக் கற்காலத்தில் உணவுத் தேவைக்காக மிருகங்களை வேட்டையாடியும், கிடைத்த தாவரங்கள், கனிகளை உண்டும் வாழ்ந்துவந்த ஆதிமனிதனின் முதல் முயற்சியாக அவன் கண்டுபிடித்தது இதைத்தான். அது என்ன?

வானத்தை நிமிர்ந்து பார்த்த அந்த ஆதிமனிதன், தன் தலைக்கு மேல் வளர்ந்த மரத்தை நோக்கினான். நெடிதுயர்ந்து விண்ணை முட்டிய மரங்கள், ஒருநாள் மண்ணை முட்டின. அவற்றை அப்புறப்படுத்தி வேற்றிடம் கொண்டு செல்ல எண்ணிய மனிதன், அதை அப்படியே அருகில் ஓடிக்கொண்டிருந்த ஆற்று நீரில் தள்ளிவிட்டான். அந்த மரம் அப்படியே உருண்டு சென்று ஆற்றின் நீர்ப்பரப்பில் மிதந்து சென்றது. தரையில் உருண்டு கொண்டே சென்று ஆற்றுத் தண்ணீரில் சுற்றிச் சுழன்ற அந்த மரத்துண்டைப் பார்த்து அவன் ஒன்றைக் கற்றுக் கொண்டான். அதுதான் அறிவியல் கண்டுபிடிப்பின் மூலாதாரம் - சக்கரம். சுதர்ஸனம்.

3 Comments:

Anonymous Anonymous said...

The pages are wonderful. Keep it up. -Thiruppur Krishnan

6:36 PM, October 05, 2007  
Anonymous Anonymous said...

very nice
V.kumar Thiyagadurgam

2:56 PM, September 12, 2009  
Anonymous Anonymous said...

Nice

2:57 PM, September 12, 2009  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

Links to this post:

Create a Link

<< Home