சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

திங்கள், ஆகஸ்ட் 27, 2007

My Photo


ஞாயிறு, ஆகஸ்ட் 26, 2007

நந்தம்பாக்கம் ராமர் கோயில் படங்கள்












இங்கே நீங்கள் காண்பது, சென்னையில் பரப்பான பகுதியாக இப்போது திகழும் நந்தம் பாக்கம் பகுதி ராமர் கோயில். இந்தக் கோதண்ட ராமன் தன் மடியில் சீதாதேவியைத் தாங்கிக் காட்சி தருகிறார். இந்தக் கோயிலுக்கு என்று பழமையான வரலாறு இருக்கிறது.


ஒரு காலத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமான் இக்காட்டில் தங்கல் எனும்படிக்கு இந்தப் பகுதிக்கு வந்து காட்சி தருவாராம். வருடத்தில் ஒரு நாள் நிகழ்வாக இது நடைபெற்றுள்ளது. இப்போது இல்லையாம். அதனால்தான் ஈக்காட்டுத்தாங்கல் எனும் பெயரில் இந்தப் பகுதி மருவி வழங்கியுள்ளது.




அந்தக் காலத்தில் பிருங்கி முனிவர் தவம் செய்த பூமி. அதனால் இந்தப் பகுதிக்கு பிருங்கி மலை என்று பெயர். ஆனால் ஆங்கிலேயர் செய்த சதியால் பிருங்கி முனிவர் பெயரை மறைத்து, செயிண்ட் தாமஸ் சர்ச் என்று பழைய காபாலீஸ்வரர் கோயிலை இடித்து சாந்தோம் பகுதியில் கட்டிவிட்டு, பரங்கிமலையாக்கி, செயிண்ட் தாமஸ் மவுண்ட் என்று ஆக்கி, ஒரு சர்ச் -ஐயும் கட்டி, இந்துக்களுக்கு துரோகம் இழைத்து வரும் இடமும் இதுதான்.




இங்குள்ள கோயில் 2000-இல் சாதாரண புல் வளர்ந்த புதர் மண்டிய இடமாகத்தான் இருந்தது. இப்போது ஊர்க்காரர்களும் நல்லுள்ளம் படைத்தவர்களாலும் கோயில் புதுப்பொலிவோடு காட்சி தருகிறது. இந்தக் கோயில் காட்சியை இங்குக் காணலாம்...






திருமலைவையாவூர் திருக்கோயில் படங்கள்






































திருமலைவையாவூர் திருக்கோயில், சென்னையிலிருந்து செங்கல்பட்டு கடந்து, படாளம் கூட் ரோடு திருப்பத்திலிருந்து வேடந்தாக்கலுக்குச் செல்லும் வழியில் உள்ளது. அங்கிருந்து வேடந்தாங்கல் 6 கி.மீ தூரத்தில் உள்ளது. கோயில் ஒரு சிறு குன்றின் மீது உள்ளது. அடிவாரத்தில் ஆஞ்சனேயர் கோயில் உள்ளது. படிகளில் ஏறி திருக்கோயிலுக்குச் செல்லலாம். கோயிலைச் சுற்றிச் செல்லும் பாதை வழியாக நேரடியாகக் கோயில் வாசலுக்கே வண்டியில் செல்லும் ஒரு வழியும் உள்ளது. இப்போது அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது திருக்கோயில். அண்மையில் இந்தக் கோயிலில் குடமுழுக்கு வைபோகம் நடைபெற்றது. இந்தக் கோயில் புகைப்படங்களை இங்குக் காணலாம்.












சனி, ஆகஸ்ட் 25, 2007

Interview with pujyasri girithbaiji

சென்னை, ஆழ்வார்பேட்டை Tag centerல் செப்டம்பர் மாத கடைசி பத்து தினங்கள் மாலை வேளையில் நிகழ்ச்சி...
ஒரு வித்தியாசம், நிகழ்ச்சி முழுவதும் ஆங்கிலத்திலேயே நடைபெற்றது. கூடவே, ஹிந்தியில் ஒரு பஜனை கோஷ்டி, இடையிடையே வாந்தியக் கருவிகளுடன் நம்மை இசையில் தோய்ந்துபோக வைக்கிறார்கள். பகவத்கீதை சுலோகங்கள் பாடல் வடிவில் நம்மை மகிழ்விக்கின்றன.

கீதா ஞான யக்ஞம் என்ற பெயரில் இந்த உபந்நியாசத்தை நிகழ்த்தியவர் பூஜ்யஸ்ரீ கிரித்பாய்ஜி.1962, ஜூலை 21-ல், குஜராத் மாநிலம் போர்பந்தரில் பிறந்தவர். வல்லபாசார்ய சம்பிரதாய வைணவக் குடும்பத்தில் பிறந்த அவருக்கு, வல்லபகுரு கோஸ்வாமி ஸ்ரீ கோவிந்தராய்ஜி உபதேசம் நல்கினாராம். அப்போது கிரித்பாய்ஜிக்கு வயது ஏழு. பாரதப் பாரம்பரியம், மத சம்பிரதாயம், கலாசாரம் ஆகியவற்றைக் கற்றுள்ளார்.அதன்பிறகு ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீராமசரித மானஸ், ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம், ஸ்ரீமத் பகவத்கீதை ஆகியவற்றை இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு உகந்த முறையில் பாமரருக்கும் எளிமையாகப் புரியும் வண்ணம் கொண்டு செல்ல எண்ணி, செயலில் இறங்கினாராம்.

1987&ல் ஸ்ரீஹனுமத் ஜயந்தி அன்றுதான் இவரது முதல் உரைநிகழ்ச்சி நடந்தது. 90&ல் ராமாயாணமும், 91&ல் ஸ்ரீமத் பாகவதமும் சொல்லத் தொடங்கியிருக்கிறார்.லண்டனில் இவர் தங்கியிருந்தபோது, இவரது உரைகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. மொரிஷியஸ், தென் ஆப்பிரிக்கா, கென்யா, பாகிஸ்தான், இத்தாலி, ஹாலந்து போன்ற நாடுகளுக்குச் சென்று, நமது நாட்டின் பாரம்பரியச் சிறப்புகளை எளிமையான முறையில் எடுத்துச் சென்ற பெருமை பெற்றார்.முதன்முறையாக தென் இந்தியாவில் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்ததாம்; அதுவும் ஒரு பஜனை கோஷ்டியாக இணைந்து!

஑஑குஜராத்தி மற்றும் ஹிந்தி பேசும் மக்கள் மட்டுமல்லது, தமிழ் மக்களும் அதிகளவில் கலந்துகொண்டது இந்த நிகழ்ச்சியை வெற்றியடையச் செய்ததுஒஒ என்றார் ஸ்ரீகிரித்பாய்ஜி. அவருடன் பேசக் கிடைத்த சந்தர்ப்பத்தில் நான் பெற்றதிலிருந்து.... கேள்வி&பதில் பாணியில் தருகிறேன்.

* படித்தவர்களே சிரமப்பட்டு அறிந்துகொள்ளும் கீதைத் தத்துவங்களை நீங்கள் எப்படி எளிமையாக்கிக் கூறுகிறீர்கள்..!


# துன்பங்கள் நம்மை வந்து துரத்துவது இந்த உலக வாழ்வில் சகஜம்தான், ஆனால் அவற்றைக் கண்டு துவண்டு விடாமல் நம்மை நாமே தேற்றிக் கொண்டு அடுத்த இலக்கை நோக்கி முன்னேறிச் செல்ல வேண்டும். இழப்பு ஏற்படுவது கண்டு வருத்தப்படக்கூடாது. ஑தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்றேஒ என்ற எண்ணம், மன உறுதியைக் குலைக்காது இருக்கும்.

அர்ஜுனனைக் கொல்ல வந்தது கர்ணன் எய்த சக்தி ஆயுதம். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தமது கால் விரலால் தேரை அழுந்தச் செய்து, அர்ஜுனன் தலையை நோக்கி வந்த அம்பு, தலைக் கிரீடத்தோடு போகும்படி செய்துவிடுகிறார். அர்ஜுனன் தலை தப்பிவிடுகிறது. இறைவனை நம்பும் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் கஷ்டங்களும் இழப்புகளும் ஏதோ சிறிய அளவிலேயே ஏற்படுகிறது.

பெரிய ஆபத்திலிருந்து இறைவன் காப்பாற்றுகிறார்.50 ரூபாயை பிக்பாக்கெட்காரனிடம் பறிகொடுத்தவன் நல்லவேளை 500 ரூபாய் போகாமல் இருந்ததே என்று தேற்றிக் கொள்வது, அவனைச் சோர்வடையச் செய்யாமல், அடுத்த பணிக்குத் தயாராக்கும். வாழ்க்கையை இப்படி நோக்கப் பழகிக் கொண்டால் துன்பமும் இழப்பும் ஒரு பொருட்டாகத் தெரியாது.

பீஷ்மர் போன்ற பெரியவர்களை, போர்க்களத்தில் கண்ட அர்ஜுனன் அறிவு மயங்குகிறான். கிருஷ்ணர் அவனுக்கு உபதேசிக்கிறார். அவன் தெளிவடைகிறான். வாழ்க்கை சங்கிலித் தொடர் போன்றது. பரம்பரையும் அத்தகையதே. கிட்டத்தட்ட கோகோ விளையாட்டு போன்றது. எதிரும் புதிருமாக, வரிசையாக விளையாடுபவர்கள் உட்கார்ந்திருப்பர். ஒருவர் எழுந்து ஓடினால், அடுத்தவர் அங்கே உடனடியாக அமர்ந்துவிடுவார். காலியாக ஒரு இடம் இருக்காது, எப்போதும் அந்த வரிசை நிரம்பியே இருக்கும். அதுபோல் எந்த இடத்திலும், எப்போதும் எதுவுமே காலியாக இருப்பதில்லை. ஒருவர் போனால் வேறொருவர் அந்த இடத்தை நிரப்புகிறார். தாத்தா இடத்தில் அப்பா; அப்பா இடத்தில் நாம்; நம் இடத்தில் நாளை நமது குழந்தைகள்...

இப்படி பரம்பரை சென்று கொண்டிருக்கும். இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் மனத்தில் துன்பத்திற்கு இடமில்லை.


* இறைவனை அடைய எத்தனையோ மார்க்கங்கள் நம் மரபில் உள்ளதே! அதை எப்படி சரியாகத் தேர்ந்தெடுப்பது?


#ஒவ்வொரு பூட்டுக்கும் ஒவ்வொரு சாவி உள்ளது. ஒரே சாவி நிறையப் பூட்டுகளைத் திறப்பதானால், அங்கே பூட்டும் தேவையில்லை; சாவியும் தேவையில்லை. பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், கர்ம மார்க்கம் என்று எத்தனையோ வழிகள் இருந்தாலும், அந்தந்த வழிமுறையில் சரியான தேர்ச்சியுடன் அந்தந்த மார்க்கங்களைப் பின்பற்ற வேண்டும். பக்தி செலுத்துபவருக்குக் கர்மம் ஒத்துவராமல் இருக்கலாம். கர்மத்தில் மட்டுமே கரைகண்டவருக்கு ஆழ்ந்த பக்தி கைவராமல் போகலாம். பக்தி மார்க்கத்திற்குப் பொருந்தும் வழிமுறை, கர்மத்திற்கோ, ஞானத்திற்கோ வழியாகாது.


* சம்பிரதாயம் ஒன்றாக இருந்தாலும் ஒருவரின் செயல்பாடுகள் மற்றவருக்கு பைத்தியக்காரத்தனமாகத் தோன்றுகிறதே!


#தமது குழந்தையின் மீது ஒரு தாய் செலுத்தும் அன்பை சாதாரண மனிதர் புரிந்து கொள்வது கடினம். குழந்தையின் மீதான அன்பால் தாய் செய்யும் செயல்கள், பார்க்கின்ற நமக்கு பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும். சுவாமி சைதன்யர், பக்த மீராபாய் போன்றவர்கள் கிருஷ்ணன் மீது செலுத்திய பக்தி நமக்குப் பார்க்க வித்தியாசமாகத் தோன்றும். ஆனால் அவர்களுக்குத்தானே தெரியும், இறைவன் மீது அவர்கள் கொண்டிருக்கும் அன்பின் வலிமை! கிருஷ்ணரிடம் முழுவதுமாகச் சரண் அடைந்தால் மட்டுமே, நமக்கு அனைத்தும் புரியும்! நமது மரபில்தான் இத்தகைய வித்தியாசமான வழிபாடுகளுக்கு இடமிருக்கிறது.


* இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், ஆன்மிக எண்ணத்தை மனத்தில் வைத்துக் கொண்டு, குடும்பத்திலும் லௌகீக வாழ்க்கையிலும் ஈடுபட ஏது நேரம்? எப்படி ஈடுபடுவது?


#கம்பி மீது நடப்பவன், கீழே விழுந்துவிடாமல் இருக்க, பெரியகம்பு ஒன்றை வைத்துக்கொண்டு நடப்பான். ஒரு பக்கத்தில் சாய்வதுபோல் தோன்றினால், கம்பை வைத்துக்கொண்டு சமன்படுத்திக் கொள்வான். ஆன்மிகமும் வேண்டும்; பரம்பரை தழைக்க குடுபத்திலும் கவனம் வேண்டும். எல்லாவற்றுக்கும் அளவுகோல் இருக்கிறது. அப்போதுதான் கம்பி மீது நடக்கும் வாழ்க்கைப் பயணத்தில் இலக்கை அடையமுடியும். எனவே ஆன்மிகத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை என்று சொல்லாதீர்கள். நமது வாழ்க்கையின் ஒவ்வொரு செயல்களிலுமே ஆன்மிகம் அடங்கியுள்ளது.ஒரே அறையில் இருவர் வாழ்கிறோம். கணவன் & மனைவி என்று கொள்ளலாம். ஒருவருக்கு ஆன்மிக நாட்டம்; மற்றவருக்கு இல்லை. எனில் ஒருவர் கருத்தை மற்றவரிடம் திணிக்க முயலாதீர்கள். உங்கள் செயல்பாடுகளை நீங்கள் சரியாகச் செய்யுங்கள். உங்கள் ஆன்மிகச் செயல்பாடுகளை தினமும் கவனித்துக் கொண்டிருக்கும், அடுத்த நபர் நிச்சயம் அவராகவே உங்கள் வழிக்கு வந்துவிடுவார். ஆன்மிகத்திற்கு அத்தகைய சக்தி உண்டு.



- கிரித்பாய்ஜியின் வித்தியாசமான பார்வை மனத்தை ஈர்த்தது. கீதைத் தத்துவ சாரத்தை, இன்றைய வாழ்வியலுக்கு ஏற்ப மக்களுக்குத் தந்த பாங்கு, தமிழன்பர்களையும் ரசிக்க வைத்தது.

interview by sri. sriram

புதன், ஆகஸ்ட் 15, 2007

காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ்

வாராதிருந்தால் இனி நான் உன்
வடிவேல் விழிக்கு மை எழுதேன்
மதிவாள் நுதற்குத் திலகம் இடேன்
மணியால் இழைத்த பணிபுனையேன்

பேராதரத்தினொடு பழக்கம்
பேசேன் சிறிதும் முகம் பாரேன்
பிறங்கு முலைப்பால் இனிதூட்டேன்
பிரியமுடன் ஒக்கலை வைத்துத்

தேரார் வீதி வளங்காட்டேன்
செய்ய கனிவாய் முத்தமிடேன்
திகழும் மணித் தொட்டிலில்
திருக்கண் வளரச் சீராட்டேன்

தாரார் இமவான் தடமார்பில்
தவழும் குழந்தாய் வருகவே
சாலிப் பதிவாழ் காந்திமதித்
தாயே வருக வருகவே

புதன், ஆகஸ்ட் 01, 2007

எப்பேர்ப்பட்ட ஊரில் இப்படி ஒரு நிலையில் கோயிலா?


அபிராமி அம்மை குடியிருக்கும் ஊரான திருக்கடையூரில் கோயில் கொண்ட பெருமாள் இப்போது ஓலைக்குடிசையில் வாசம் செய்கிறார். அவரைப் பற்றிய ஓர் அறிமுகம்.

இவர் அமிர்த நாராயணப் பெருமாள். மார்க்கண்டேயனைக் காக்கும் அவசரத்தில் சிவபிரான் கோபத்தில் எமதர்மனைக் காலால் எட்டி உதைத்தார். அதற்கான சாட்சியாய் இந்தப் பெருமாளை சுட்டிக் காட்டினார் சிவனார் என்பது கதை.

அண்மையில் நண்பர்கள் புடைசூழ திருக்கடையூருக்குப் பயணமானேன். மூத்த நண்பர் திரு. வல்லிபுரம் சுபாஷ் சந்திரனுக்கு 60 வயது பூர்த்தியானதை ஒட்டி திருக்கடையூர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தார்கள். அதற்காகத்தான் அவ்வூருக்குப் பயணமானேன். அதுவே எனது முதல் பயணம் அந்த ஊருக்கு.

ஊர் நன்றாகவே உள்ளது. கோயில் ஜே ஜே என்று இருக்கிறது. ஒரே நாளில் சுமார் நாற்பது, அறுபதாம் கல்யாண உற்சவம் நடக்கிறது. கோயிலலச் சுற்றியுள்ள மக்களுக்கு பிழைப்புக்கு கொஞ்சம் வழியும் இருக்கிறது. சத்திரங்களை எடுத்து காண்ட்ராக்ட் முறறயில் எல்லாம் செய்து கொடுக்கிறார்கள். கோயிலில் 60ம் கல்யாணத்துக்கு ஒவ்வொரு மண்டபத்திலும் உட்கார தனி ரேட். இப்படிக் கொழிக்கிறார் அமிர்த கடேஸ்வரர். அவர் பெயரால் கொஞ்சம் வைதீகர்களுக்கும் பிழைப்பு ஓடுகிறது. செழிப்பு தெரிகிறது. ஆனால் பரிதாபத்துக்குரியவர் யயர் என்றால், இந்தப் பெருமாள்தான்.


நானும் கலைமகள் பத்திரிகை ஆசிரியர் கீழாம்பூரும் அப்படியே கொஞ்சம் முள்காட்டில் நடந்து பெருமாள் கோயிலைத்தேடிப் போனோம். இவர்கள் செய்திருக்கும் ஒரே நல்ல காரியம், எக்கச்சக்க கூட்டம் வரும் அபிராமியம்மை கோயிலின் வாசலில் பெருமாள் கோயிலுக்குப் போகும் வழி என்று ஒரு போர்ட் வைத்திருப்பதுதான்.


வழியில் ஒரு கிழவி மூங்கில் பிரம்பில் தன் கைவித்தையைக் காட்டிக் கொண்டிருந்தாள். அவளிடம் போய் பாட்டி பெருமாள் கோயில் எவ்வளவு தொலவு இருக்கு? ன்னு கேட்டேன். மிகச் சாதாரணமாக ஒன்று சொன்னாள். அதான் தங்கச்சிக்காக அவரு போட்ருந்த நக நட்டல்லாம் கழட்டிக் கொடுத்துட்டு ஒண்ணும் வேணாம்னு ஓட்டாண்டியா போய் ஓரத்துல போய் ஒதுங்கியிருக்காரே! போங்க போய்ப் பாருங்கண்ணு சொல்லி வழியயும் காட்டினாள்.





அப்படியே போய்ப் பார்த்தோம். அந்தக் காட்சிகள்தான் இங்கே நீங்கள் காண்பது. சும்மா சொல்லக்கூடாது, விக்ரக ரூபியாக எழுந்தருயிருக்கும் தாயார் அழகே அழகு. சௌந்தர்ய ரூபியாய் பாவம்... இடிந்துபட்ட வீட்டில் இருக்கிறாள் உலகுக்கே படியளப்பவள்.


கிழவி சொன்ன யதார்த்த வார்த்தைக்கு ஒரு கதையும் இருக்கிறது. அதுதான் இந்த தலபுராணம்.


பாற்கடலைக் கடைந்தார்கள் தேவர்களும் அசுரர்களும். அதிலிருந்து அமுதம் குடத்தில் வெளிப்பட்டது. அமுதக் குடத்தை எடுத்துக் கொண்டு திருக்கடையூர் குளக்கரையில் உட்கார்ந்துவிட்டனர் அனைவரும். அசுரர்களை குளித்துவிட்டு வரச் சொல்லி, தேவர்கள் நைஸாக அமுதக் குடத்தை பங்கு போட ஆரம்பித்து விட்டனர். விஷ்ணுவோ தேவர்களின் அடிபிடி சண்டையை சமாதானப் படுத்தி ஒழுங்காக டிஸ்ட்ரிபூட் பண்ணனும்னு வந்தார். குடத்துக்குள்ளே கையைவிட்டா லிங்கம்தான் இருக்கு. யாருக்கும் ஒன்னும் புரிபடலே. அப்புறமாத்தான் தெரிஞ்சது, விஷத்த மட்டும் சிவனாருக்கு அள்ளிக் கொடுத்து விட்டு, இந்த அமுதம் கிடைக்க அவரும் காரணம்னா அப்டின்னு கொஞ்சம் கூட ஒரு நன்றியுணர்ச்சி இல்லாம இந்த தேவர்கள் எல்லாம் அமுதத்தைப் பங்கு போட அடிபோட்டாண்ணா... சிவனாரும் தன்னோட லீலையைக் காட்ட வேண்டாமா? அதான் அப்படியே குடத்துக்குள்ள வந்து அப்படியே ஒக்காந்துட்டார்.


பெருமாளுக்குப் புரிஞ்சது... உடனே தன்னோட ஆபரணத்தக் கழட்டி வெச்சார். லிங்கத்துக்குப் பக்கத்துல சக்தி தேவிய... அதான் அபிராமியம்மைய நெனச்சுக்கிட்டே அமுதம் சித்திக்கணும்னு தேவர்கள்ளாம் பிரார்த்தனன பண்ணினா. உடனே அமுதம் அந்தக் குடத்துல தெரிஞ்சது. அப்புறம் எல்லாருக்கும் கொடுக்க ஆரம்பித்தார்....
இப்படிப் போகிறது கதை.


அடுத்த ஒரு கதைதான், நான் முதலில் சொன்னது. மார்க்கண்டேயன் தன்னோட முடிவு நாள் நெருங்கற சமயத்துல சிவபெருமானத் தஞ்சம் அடைஞ்சான். லிங்கத்தோட கழுத்தக் கட்டிப் பிடிச்சுட்டு சிவநாமம் ஜபிச்சான்.


காலன் வரும் நேரமும் வந்தது. அவன் தன்னோட பாசக் கயிற்றை வீசினான். அது அப்படியே லிங்கத்தோட கழுத்துலயும் மாட்டிண்டது. சிவனார் ருத்ர அவதாரியானார். காலனின் கயிற்றுக்குப் பதிலாக தன் காலால் ஒரே மிதி, மிதித்துத் தள்ளினார். அப்படியே சும்மா இருக்கப்படாதோ? தான் காலனை காலால் மிதிச்சதுக்கு சாட்சியாக இருக்கணும்னு இந்த அமிர்தநாராயணப் பெருமாளப் பார்த்து விரலக் காட்டி சைகை செஞ்சாராம். இப்போதும் அபிராமி அம்மை சமேத அமிர்த கடேஸ்வரர் கோயில்ல இருக்கற சிவபெருமான் இந்தப் பெருமாளப் பார்த்து ஒரு விரல நீட்டி சைகை காமிக்கிறார் என்கிறார்கள்.


இதச் சொன்னபோது, தொழிலதிபர், மூத்த நண்பர் திரு பி.சங்கரன், ஒரு கேள்வி கேட்டார். ''அது சரி ஸ்ரீராம், மார்க்கண்டேயனுக்கு எப்போ காலன் வருவான்னு தெரிஞ்சது. ஆனா நாமோ எப்போ என்ன வரும்னு தெரியாத நிலையில இருக்கோம். அப்ப, எப்பத்தான் நாம இங்க வந்து பூஜை செய்யிறது?"

அதுக்குத்தான், ஆழ்வார் ஒரே வார்த்தை சொன்னார்... ''அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கமா நகருளானே!" ன்னு.. அப்படின்னு சொல்லி கொஞ்சம் விளக்கமும் கொடுத்தேன்.


சரி விஷயத்துக்கு வருகிறேன். திருக்கடையூருக்குப் போகிற அன்பர்கள், அதுவும் ஆயிரக்கணக்கில் செலவு செய்து, வண்டியெல்லாம் வைத்துக் கொண்டு கண்மண் தெரியாமல் செலவு செய்து கொண்டு திருக்கடையூர் போகிறவர்கள், அப்படியே தங்களால முடிஞ்சத அந்தப் பெருமாளுக்கும் தாயாருக்கும் செய்துவிட்டு, அவர்களின் வீடும் அழகோடு திகழ வழி செய்தார்களானால் புண்ணியமாகப் போகும்.

ஸ்ரீ சுதர்ஸனர்சக்கரத்தாழ்வார் மகிமை

ஓம் ஸ்ரீ சுதர்ஸனாய நம:

ஓம் சுதர்ஸனாய வித்மஹே மஹாஜ்வாலாய தீமஹிதந்நோ சகர ப்ரஜோதயாத்

அறிவியல் அற்புதங்களும் கண்டுபிடிப்புகளும் நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ள காலத்தில் நாம் இருக்கிறோம். எண்ணிய எய்தும் அற்புதம் வாய்க்கப்பெற்ற இந்நாளில், இத்தகைய பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கும் ஒரு முதல் கண்டுபிடிப்பாக ஒன்று நம் நினைவில் வரும்... அது என்ன?

மனிதன் தன் சக்தியை உணரத்தொடங்கிய முதல் கால கட்டம். அதை கற்காலம் என்று வகுத்திருக்கிறார்கள் இன்றைய அறிவியலார். அந்தக் கற்காலத்தில் உணவுத் தேவைக்காக மிருகங்களை வேட்டையாடியும், கிடைத்த தாவரங்கள், கனிகளை உண்டும் வாழ்ந்துவந்த ஆதிமனிதனின் முதல் முயற்சியாக அவன் கண்டுபிடித்தது இதைத்தான். அது என்ன?

வானத்தை நிமிர்ந்து பார்த்த அந்த ஆதிமனிதன், தன் தலைக்கு மேல் வளர்ந்த மரத்தை நோக்கினான். நெடிதுயர்ந்து விண்ணை முட்டிய மரங்கள், ஒருநாள் மண்ணை முட்டின. அவற்றை அப்புறப்படுத்தி வேற்றிடம் கொண்டு செல்ல எண்ணிய மனிதன், அதை அப்படியே அருகில் ஓடிக்கொண்டிருந்த ஆற்று நீரில் தள்ளிவிட்டான். அந்த மரம் அப்படியே உருண்டு சென்று ஆற்றின் நீர்ப்பரப்பில் மிதந்து சென்றது. தரையில் உருண்டு கொண்டே சென்று ஆற்றுத் தண்ணீரில் சுற்றிச் சுழன்ற அந்த மரத்துண்டைப் பார்த்து அவன் ஒன்றைக் கற்றுக் கொண்டான். அதுதான் அறிவியல் கண்டுபிடிப்பின் மூலாதாரம் - சக்கரம். சுதர்ஸனம்.


ஸ்ரீ சுதர்ஸன மகிமை

ஜந்துனாம் நரஜன்ம துர்லபம் - எண்ணரிய பிறவியிலே மானிடப் பிறவிதான் யாதினும் அரிது அரிது காண் என்று மகான் தாயுமானவரும் போற்றுகிறார். இந்த மானிடப் பிறவி ஏன் சிறந்தது? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். ஆறறிவு பரைத்ததினால்தானே!

இறைவன் எங்குமிருக்கிறான். அவன் தன்னுள்ளும் இருக்கிறான். அவனைக் காண வேண்டும் என்ற முதிர்ந்த சிறந்த அறிவு, அந்த ஞானம் ஏற்பட வேண்டும் என்றால், இந்த மானிடப் பிறவியில்தான் முடியும். அதனால்தான் மனிதன் சிறந்தவனாகிறான்.

இறைவனைக் காண முயற்சி செய்யும்போது அவன் மேற்கொள்ளும் முயற்சிகள் பல. உத்திகள் அநேகம். அகண்டாகாரமான ஒரு பெரும் பொருளை தன் மனதுக்குகந்த உருவிலே வழிபட்டு வெற்றியடைந்து, முடிவிலே அப்பரம்பொருளினை அனுபவிப்பதே சிறப்பாகும். இதுவே தெய்வ உபாசனையாகும். முத்திக்கு வித்தான மூர்த்தி, சித்திக்கும் உதவுவதே உபாசனா மார்க்கத்தின் சிறப்பு. அத்தகைய சிறப்பு ஞான மார்க்கத்திலே அதன் நடுவிலே இகத்திற்கும் மிகவிரைவிலே பலனளிக்கும் நிலையிலேயுள்ள உபாசனைகளில் சுதர்சனம் ந்ருஸிம்ஹம், ஆஞ்சநேயம், ஹயக்ரீவம், வராஹம் முதலியவை குறிப்பிடத்தக்கவை.

உக்கிர வடிவிலே உள்ள பரம்பொருளைத் தீவிர உபாசனையின் மூலம் அணுகுவதே மகா சுதர்ஸன உபாசனையாகும். மகா விஷ்ணுவின் திருக்கையை அலங்கரிக்கும் சுதர்சனர் அவருக்கும் அவரை அனவரதமும் வணங்கி பூஜிப்பவருக்கும், பாதுகாவலராயிருந்து சத்ருக்களை சம்ஹாரம் செய்து நம்மை ரக்ஷித்து வருகிறார்.

ஸ்ரீசுதர்சனர் பிரத்யட்ச தெய்வம். தீவிரமாக உபாசிப்பவர்கட்கு விரும்பியதை அளித்து காப்பாற்றுவதாக பல நூல்களும் கூறுகின்றன.

ஸ்நானே, தானே, ஜபாதௌச ச்ராத்தே சைவ விஷேத: சிந்தநீய: சக்ரபாணி ஸர்வா கௌக விநாசந: - ஸர்வ கர்மஸு பூர்ணம் ஸ்யாத் ஸத்யம் ஸத்யம் ஹி நாரத:

என்று பிரமன் நாரதருக்கு ஸ்ரீ சுதர்ஸனர் ஸ்நானம், தானம் தவம் ஜபம் த்தம் முதலியவற்றை குறிப்பிட்டு எக்காலத்திலும் தியானிக்கத்தக்கவர் என்று ஸத்யம் செய்து கூறுகிறார் என்கிறது புராணம்.

உலகத்தைக் காக்கும் சகல வல்லமை கொண்டுள்ள விஷ்ணு பகவானே - சுதர்ஸனரைநிரந்தரமாக தனது திருக்கையில் வைத்துக் கொண்டிருக்கிறார்.

ஸ்ரீ சுதர்ஸன மகிமை:
பலவித உபாசனைகளில் யந்திர உபாசனை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஸ்ரீ சுதர்ஸன யந்திரம், ஸ்ரீ சுதர்ஸன மகா யந்திரம்- இரண்டும் முறையே சக்ரரூபி விஷ்ணு, நவகிரகங்களின் நடு நாயகர், பஞ்ச பூதங்களுக்குச் சக்தியூட்டும் பரம் பொருள் - ஸ்ரீ சூரிய பகவான் உடன் மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது. யந்திரங்களுடன் கூடிய படத்தை கண்ணாடி போட்டு பூஜையில் வைத்து ஸ்நானம் செய்து மிகவும் ஆசாரத்துடன் வழிபாடு செய்து வர வேண்டும். எண்ணிய காரியங்கள் யாவற்றிலும் வெற்றி பெறலாம்.

பயங்கரமான துர்ஸ்வப்னங்கள் சித்தப்பிரமை, சதா மனோவியாகூலம், பேய் பிசாசு பில்லி சூனியம் ஏவல் இவைகளால் உண்டாகிற சகலவிதமான துன்பங்களையும் ஸ்ரீ சுதர்ஸன மகாயந்திரம் நிவர்த்திக்கும்.

சிலருக்கு ஜாதகத்தில் கேந்திராதிபத்ய தோஷம் ஏற்பட்டு சுபயோகங்கள் தடைபட்டு தரித்திரத்வம் ஏற்படும். ராஜயோகங்கள் பங்கப்படும். சரீர பலம், மனோபலம், தைர்யம், இவை குறைபட்டு எதிலும் தெளிவில்லாது சபை கோழையாயிருப்பார்கள். இவைபோன்ற கஷ்டங்களை ஸ்ரீசுதர்ஸன மூல மந்திரத்தை பெற்றோர் அல்லது குருவிடம் உபதேசம் பெற்று தினசரி ஜபம் செய்து யந்திர ஆராதனை செய்ய வேண்டும்.

மொத்தம் 1008 வகை சுதர்சன மந்திரங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 108 மந்திரங்கள் மிகப் பிரபலமாக உள்ளன. ஏதேனும் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை ஸித்தி செய்தல் நலம் தரும்.

காயத்ரி மஹாமந்திரம், சூரிய மண்டலம் நடுவே உள்ள ஸ்ரீமந்நாராயணன் - ஸ்ரீசுதர்சன பகவான் இவர்களைக் குறிப்பதாகும். எனவே தினமும் காயத்ரீ ஜபம் செய்த பின்னரே சுதர்சன ஜபம் செய்யவேண்டும்.

அழகு வாய்ந்த எல்லா அங்கங்களுடன் பிரகாசிப்பவரும் எட்டுக் கைகள் கொண்டவரும் மூன்று கண்கள் உடையவரும் தித்திப் பற்களால் பயங்கரமான முகத்தை உடையவரும் பயத்திற்கும் பயத்தை அளிப்பவௌம் பயங்கரமான மஞ்சள் நிறத்தலை முடி உடையவரும் அக்னி ஜ்வாலையின் மாலைகளால் சூழப்பட்டவரும் கண்களுக்கு எட்டாதவரும் குறிப்பிட முடியாதவரும் பிரமாண்டம் முழுவதும் வியாபித்த சரீரம் உடையவரும் எட்டு ஆயுதங்களால் சூழப்பட்டவரும் எட்டு சக்திகளுடன் கூடியவர்ம் எட்டு ஆரங்களுடன் கூடிய மிக பயங்கரமான சக்ரத்தை உடையவரும் இந்த சக்ரம், உலக்கை, ஈட்டி, தாமரை என்ற நான்கையும் வலது கைகள் நான்கில் தரித்தவரும்  இடதுபுறம் உள்ள நான்கு கைகளில் சங்கம் அம்புடன் கூடிய வில் பாசக்கயிறு கதை ஆகியவைகளை தரித்தவரும் சிவப்பு புஷ்ப மாலையால் சோபிப்பவரும் சிவப்பு சந்தனத்தால் பூசப்பட்ட அங்கங்களை உடையவரும், திவ்ய ரத்னங்களால் இழைக்கப்பட்டதும் விசித்திரமானதும் ஆகிய கிரீடத்தால் பிரகாசிப்பவரும் துஷ்டர்களை அடக்கி பக்தர்கட்கு அனுக்ரஹம் செய்பவருமான ஸ்ரீ சுதர்ஸனர் என்ற பெயருள்ள சக்ரத்தாழ்வாரை தனக்கு எதிரில் இருப்பதாக ஸ்மரித்துக் கொண்டு சூர்ய பகவான் த்யானம் செய்ததாக பவிஷ்யோத்தர புராணம் கூறுகிறது.

கும்பகோணம் சக்ர படித்துறையில் உள்ள சக்கர தீர்த்தத்தில்தான் பிரம்மா அவப்ருத ஸ்னானம் செய்து யாகம் செய்தார். உடனே பாதாளத்திலிருந்து சகக்ரம் வெளிக்கிளம்பி மேலே வந்தது. அந்த சக்கரத்தின் நடுவில் பிரம்மனுக்கு அன்று காட்சி தந்த ஸ்ரீமந் நாராயணன்தான் இன்று நமக்கு ஸ்ரீ சக்ரபாணியாக கட்சி தருகிறார்.

ஸாளக்ராமங்களில் சுதர்சன சாளக்ராமம் மிகச் சிறந்தது. ஒரு சக்ரம் மட்டுமே உள்ள மிகப் பெரிய சாளக்ராமம் சுதர்சனமாகும். திருமாலின் சக்ராயுதத்தின் பூர்ண சக்தி இதற்கு உண்டு.

சுதர்சன மந்திரத்தில் ஓம் க்லீம் க்ருஷ்ணாய என்று தொடங்கும் மந்திரமே பெரும்பாலும் சுதர்சன ஹோமத்திற்குப் பயன்பட்டு வருகிறது. ஸர்வ சத்ரு நாசன சுதர்சன மந்த்ரம் இதுதான்...
ஓம் மஹா ஸுதர்சனாய
ஸர்வ சத்ரு ஸம்ஹர ஸம்ஹர
ஸர்வ க்ஷுத்ரம் மாரய மாரய
ஸர்வ ரோகம் நிவாரய நிவாரய
மஹா ஸுதர்சனாய சக்ர ராஜாய ஹும்பட் ஸ்வாஹா||

இந்த மந்திரத்தை வெண்கடுகு, ஸமித்து கொண்டு ஹோமம் செய்தால் சத்ருக்கள் அழிவார்கள். நாயுருவி உபயோகித்தால் வியாதி நாசம்... வெண்பட்டு ஹோமத்தில் இட்டால் ஐச்வர்ய விருத்தி... செந்தாமரையை இட்டால் கடன் நிவாரணம் ஆகியவை ஏற்படும்.
ரோக நிவர்த்திக்கு அஸ்வினி நட்சத்திரத்திலும் பரணி, திருவாதிரை, உத்திரட்டாதி ஸம்ஹார பிரயோகத்திற்கும், பைசாச உபாதைகளை நீக்க ஸ்வாதியும், ஏகாதசி சத்ரு நாசத்திற்கும், திரயோதசி பௌர்ணமி வச்ய ப்ரயோகம் செய்யவும் பயன்படுமென்று மந்த்ர மஹோததி மந்த்ர தத்வநிதி மந்த்ர மஹார்ணவம் முதலிய சாஸ்திரங்கள் கூறுகின்றன.
நம் காம்யார்த்தங்கள் நிறைவேற ஹோமமே சிறந்த ஸாதனம். பீஜங்கள் சேர்த்த மூல மந்திரத்தைப் பிரயோகத்திற்கு ஏற்றபடி தக்க ஹவிஸ்ஸுடன் நாம் அக்னிதத்வத்தில் ஸமர்ப்பிக்கிறோம். எண்ணையில் இட்ட பச்சை அப்பளம் சாப்பிடக்கூடிய நிலையில் பொரிந்து வருவதைப்போல ஹவிஸ்ஸுடன் சேர்ந்த மந்திரம் தீயில் ஸ்வாஹா என்று இடப்பட்டு உடனே நம் காம்யார்த்தங்கள் பலன் ரூபத்தில் நிறைவேறுகின்றன.

மந்திர சாஸ்திரங்களின் பிரயோகங்கள் வெளிப்படையாகக் கூறப்படுவதில்லை. நாட்டு மருத்துவத்தில் பச்சிலைகள் எவ்விதம் மறைபொருளாகக் கூறப்படுகின்றனவோ அவ்விதமே மந்த்ரமும் இலைமறை காய்மறையாகவே உபதேசிக்கப்பட்டு வந்துள்ளது. செய்யப்போகும் பிரயோகத்திற்கு தகுந்தபடி, பஞ்சபூத தத்வங்களான லம், ஹம், யம், ரம், வம் என்ற பீஜங்களையும் யாருக்காக செய்யப்படுகிறதோ அவர் பெயரையும் அதற்கு மந்திரத்தில் ஸூக்ஷ்மமாக அமைந்திருக்கும் இடத்தில் மந்த்ர பாண்டித்யம் உள்ளவர்கள் சேர்ப்பார்கள்.
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix