சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

வெள்ளி, அக்டோபர் 05, 2007

PARIS MANICKA VINAYAGAR TEMPLE CAR FESTIVAL



































பாரீஸ் மாணிக்க விநாயகர் 12 வது தேர்த் திருவிழா










இங்கே நீங்கள் காண்பது, பிரான்ஸின் தலைநகரான பாரீஸில் வீற்றிருக்கும் மாணிக்க விநாயகர் ஆலயத்தில் நடந்த தேர்த்திருவிழா பற்றிய செய்தியும் படங்களும்...

பிறந்த பொன்னாடும் பிறந்த மதமும் கலாசாரமும் என்றென்றும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்கின்ற கொள்கை உடைய உண்மைத் தமிழர் உலகமெலாம் பரந்திருக்கின்றனர். அவர்களின் கொள்கைகளை இன்றளவும் காத்துவருவதை இந்த விழாவின் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம். குறிஞ்சிக்கு முருகனும் முல்லைக்கு மாலவனும் தெய்வங்களாக பழங்காலத் தமிழனின் பார்வையிலிருந்து இன்றுவரை வந்துகொண்டிருக்கிறது.

பிரான்ஸின் பாரீஸ் நகரில் வீற்றிருக்கும் ஸ்ரீமாணிக்க விநாயகர் கோயிலில் தர்மகர்த்தாவாக இருந்து கோயிலை நல்ல முறையில் பரிபாலித்துவரும் திரு. சந்திரசேகரம் குழுவினரின் முயற்சியில் இந்த வருடமும் தேர்த்திருவிழா நல்ல முறையில் நடந்து முடிந்தது. பாரீஸ் நகரின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இது கருதப்படுகிறது. இந்தத் தேர் பவனியை பல செய்தி ஊடகங்கள் அங்கே வெளிப்படுத்தியுள்ளன. தமிழர் கலாசார நிகழ்வாகத் திகழும் இந்த நிகழ்வுக்கு பாரீஸ் மற்றும் பிரான்ஸின் இந்துக்கள் மட்டுமல்லாது அண்டை நாட்டு இந்துக்கள் அல்லாதோரும் இந்துக் கலாசார நிகழ்வாகிய இந்த தேர் பவனியில் காவடி எடுத்து உற்சாகமாகக் கலந்து கொள்கின்றனர்.

இந்த வருடம் செப். 2இல் இந்த 12வது தேர்பவனி விழா நடந்தது, இந்த நிகழ்வில் இலங்கை இந்திய தூதரகத்தைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். வழக்கம் போல் வீதியில் வர்த்தகர்களும் பக்தர்களும் கூடி, வீதியை சுத்தம் செய்து, மாவிலை தோரணம் கட்டி அலங்கரித்து, வந்த பக்தர்களுக்கு சிற்றுண்டி கொடுத்து சிறப்பித்தனர்.

தேர்பவனியின் போது, பல ஆயிரக்கணக்கான தேங்காய்கள் சிதறி அடிக்கப்பட்டதை, அதாவது விடல் போடப்பட்டதை வேற்றுநாட்டவர்கள் ஆச்சரியமுடனும் ஆர்வத்துடனும் கண்டு ரசித்தனர். பகல் 11 மணியில் இருந்து, பிற்பகல் 3மணி வரை பாரீஸின் குறிபிட்ட பிரதான வீதிகள் வழியாக பேருந்து போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது. மேளதாளங்கள், காவடிகள், கற்பூரச் சட்டிகள் என பக்தர்களின் கூட்டம் அலைமோத விநாயகப் பெருமான் பாரீஸின் நகர வீதிகளில் தேரில் அமர்ந்துகொண்டு பவனி வந்தார்.
தமிழகத்தின் டமில் கல்ச்சர் காக்கும் கலகத்துக்காரர்கள் தினந்தோறும் சிறுமூளை சிதறியபடி சுய உணர்வில்லாமல் உளறிக்கொண்டிருக்க, திக்கெட்டும் கால் பதித்துள்ள இலங்கைத் தமிழர்கள் இன்னும் அதே பழைய கலாசாரப் பிடிப்புடன் திகழ்வது ஆறுதல் அளிக்கும் சங்கதி. மேலே படங்களில் நீங்கள் கண்ட இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் இலங்கைத் தமிழர்களே!

புதன், செப்டம்பர் 26, 2007

S.G.Kittappa's contributed Library









This Library situated in Sengottai, which is contributed by S.G.Kittappa,
செங்கோட்டை மண்ணின் நண்பர்களே...
நம் ஊரின் மெயின்ரோடில் உள்ள ஸ்ரீமூலம் வாசகசாலை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த வாசகசாலையானது நம் ஊருக்குப் பெருமை சேர்த்த பழம்பெரும் நாடக நடிகர், பாடகர் அமரர் எஸ்.ஜி.கிட்டப்பா அவர்களின் நன்கொடையாக கட்டடம் கட்டிக்கொடுக்கப்பட்டு நம் சமுதாயத்துக்காக அளிக்கப்பட்டது. அதில் பழம்பெருமையும் கிடைத்தற்கு அரியதுமான புத்தகங்கள் பல இடம்பெற்றிருந்ததை நண்பர்கள் அறிவீர்கள். சிறுவயதுமுதல் அந்தப் புத்தகங்கள் நம் பொதுஅறிவை வளர்த்து ஆளாக்க உதவியதை நீங்கள் மறக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். அந்த வாசகசாலையானது 1919 முதல் முன்னாள் திருவாங்கூர் மகாராஜா ஸ்ரீமூலம் திருநாள் மகாராஜா பெயரில் 'ஸ்ரீமூலம் வாசகசாலையாக இயங்கி வந்தது.
அந்த வாசகசாலையானது இன்னும் பரவலாக பொது பயன்பாட்டுக்கு வரவேண்டும் என்று எண்ணி சமுதாயத்தின் சார்பில் செங்கோட்டை நகராட்சிக்கு, வாடகையின்றி நூலகம் நடத்துவதற்கு, அவர்களின் பொறுப்பில் 1985 முதல் கொடுக்கப்பட்டிருந்தது. நூலகம் நன்றாக இயங்கிவந்த போதிலும் அதில் பாதுகாக்கப்பட்டிருந்த அரிய நூல்கள் பலவும் தற்போது காணாமல் போயுள்ளன.
1906 இல் பிறந்த எஸ்.ஜி.கிட்டப்பாவின் நூற்றாண்டை ஓரளவு ஈடுபாட்டுடன் ஊரில் கொண்டாடினோம். ஊர்ப் பெரியவர்கள் சிலர் அரசின் மூலம் ஏதாவது செய்ய எண்ணி செயலில் இறங்கினர். அதன் ஒரு பகுதியாக நான் மஞ்சரி மாத இதழில் ஆசிரியராக இருந்தபோது கிட்டப்பாவைப் பற்றிய நீண்ட கட்டுரையை வெளியிட்டு, அவருடைய நூற்றாண்டு விழா வருடமான 2006இல் அவர் நினனவாக நினைவு மண்டபமோ நினைவில்லமோ அரசின் சார்பில் கட்டித் தரப்படவேண்டும் என்ற வேண்டுகோளை வைத்து தமிழக அரசின் கவனத்தைக் கவர முயன்றேன். அரசின் சார்பில் அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும், சில இடையூறுகளால் அது பெரிய அளவில் இயலாமல் போனது.
தற்போது நகராட்சியால் வாசகசாலையை சரிவரப் பராமரிக்க இயலாத நிலையில் நகராட்சி மீண்டும் நம் சமுதாயத்தின் கட்டுப்பாட்டுக்குள் இந்த வாசக சாலையை ஒப்படைத்துள்ளது. நம் சமுதாயத்தின் சார்பில் அமரர் எஸ்.ஜி.கிட்டப்பா நூற்றாண்டு நினைவாக வாசகசாலையை நல்லமுறையில் நடத்த எண்ணம் கொண்டு ஊரில் உள்ள பெரியவர்கள் அரிய முயற்சியை எடுத்து வருகிறார்கள்.
இதன் பொறுப்பாளராக, மேட்டுத்தெரு வி.வெங்கடேஸ்வரன் செயல்பட்டு வருகிறார்.
நண்பர்கள், செய்யவேண்டியது என்னவென்றால், நம் அடுத்த மாணவத் தலைமுறை பயன்படும் வகையில் நல்ல நூல்களை, அறிவுப் பொக்கிஷங்களை அந்த நூலகத்தில் வாங்கி வைக்க வேண்டியது... நல்ல பத்திரிகைகளுக்கு சந்தா கட்டி, நம் சார்பில் நூலகத்துக்கு வரவைக்க வேண்டியது, இன்னும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்வது... இவ்வளவே!
நம் பகுதியில் உள்ள இரு பெரும் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளும் பயன்பெறும் வகையிலும், அனைத்து இளைஞர்களும் உலகை தைரியமாக எதிர்கொள்ளும் வகையிலும் இந்த நூல்நிலையத்தை நாம் உயர்த்தவேண்டும்.
கல்வி தானம் மிகச் சிறந்தது, அதன் ஒரு பகுதி, நல்ல நூல்களை மாணவர்களும் இளைஞர்களும் படிக்க உதவி, அவர்கள் பட்டறிவும் படிப்பறிவும் பெறச் செய்வது...
தொடர்புக்கு... வி.வெங்கடேஸ்வரன், (மேலாளர்), மேட்டுத் தெரு, செங்கோட்டை, பின்: 627 809.
உங்களது அன்பான பதில்களையும் நடவடிக்கைகளையும் எதிர்பார்த்து,
அன்பன்
செங்கோட்டை ஸ்ரீராம்.

Chennai Thiruvatiswaranpet Panduranga Mandir


























Pictures of Sri Panduranga Mandir situated near Thiruvattiswaran Koil ie., nearer to Thiruvallikeni (Triplicane) - Chennai 5, (TamilNadu) and the beautiful compact temple, saints shila and panduranga srirahumayi mandir...




 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix